Skip to main content

‘அவன் இவன்’ பட விவகாரம் அம்பை நீதிமன்றத்தில் டைரக்டர் பாலா ஆஜர்!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

Director Bala  appear in 'Avan Ivan' movie case

 

பரபரப்பான டைரக்டர் பாலாவின் இயக்கத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்தது நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் மாறுபட்ட கேரக்டரில் நடித்த ‘அவன் இவன்’ என்கிற திரைப்படம்.


அந்தப் படத்தில் நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள சிங்கம்பட்டி ஜமீன், காரையார் சொரிமுத்து அய்யனார் திருக்கோவில் பற்றிய சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றதாக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தார் தீர்த்தபதி ராஜாவின் மகன் சங்கர் ஆத்மஜன் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை அம்பை ஒருங்கிணைந்த குற்றவியல் நீதிமன்ற வளாகத்திலுள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

 

இவ்வழக்கு தொடர்பான விசாரணையின் பொருட்டு இயக்குனர் பாலாவிற்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது. அது தொடர்பாக நேற்று அம்பை நீதிமன்றத்த்தில் டைரக்டர் பாலா ஆஜரானார். அதுசமயம் மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் நடத்திய விசாரணையின்போது படத்தில் வரும் கதாபாத்திரமும், கதையும் கற்பனையே என்றும் இந்த வழக்குத் தொடர்வதின் மூலம் பணம் ஆதாயம் பெறுவதற்காகவே புனையப்பட்ட வழக்கு என்று டைரக்டர் பாலா தரப்பில் கூறியதாகச் சொல்லப்படுகிறது. 

 

இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் பிப்.8ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுசமயம் மீண்டும் டைரக்டர் பாலா ஆஜராகும்படி உத்தரவிட்டார். இந்த வழக்கின் பொருட்டு டைரக்டர் பாலா சார்பில் வழக்கறிஞர்கள் முகம்மது உசேன் மற்றும் நயினார் முகம்மதுவும், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ரமேஷ் ஆகியோர் ஆஜராயினர். நடிகர் ஆர்யா இவ்வழக்கின் விசாரணையிலிருந்து விலக்குப் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாலுமகேந்திராவுக்கு நோ சொன்னதும் பாலா ஃபோன் அடிச்சாரு” - நக்கீரன் ஆசிரியர்

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
Nakkheeran Gopal | Koose Munisamy Veerappan |

 

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் வருகிற 14 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசியது படக்குழு. 

பத்திரிகையாளர் சந்திப்பின்போது நக்கீரன் ஆசிரியர் வீரப்பனைப் பற்றி படம் எடுப்பதற்காக தன்னை தொடர்பு கொண்டவர்களைப் பற்றி ஒரு விசயத்தை பகிர்ந்து கொண்டார். அதாவது, ‘வீரப்பனை பற்றி படம் எடுப்பதற்காக பலர் அவரை தொடர்பு கொண்டிருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் இயக்குநர் பாலுமகேந்திரா. அவர் இறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு நக்கீரன் ஆசிரியரை நேரில் சந்தித்து, வீரப்பனை பற்றி படம் எடுக்கப் போவதாகவும், தாங்கள் சேகரித்து வைத்திருப்பதை தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார். நாளைக்கு சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டு, மறுநாள் காலை ஃபோனில் அழைத்து மறுப்பு தெரிவித்திருக்கிறார். இதற்காக இயக்குநர் பாலா நக்கீரன் ஆசிரியரை தொடர்பு கொண்டு, “என் குருநாதர் கேட்டே நீங்க தரமாட்டேன்னு சொல்லிட்டீங்களா” என்றிருக்கிறார். நேர்ல வாங்கண்ணே பேசுவோம் என்று நக்கீரன் ஆசிரியர் சொல்லியிருக்கிறார்.

Next Story

பெரியார் - பிள்ளையார்; பாலாவின் வணங்கான் அப்டேட்

Published on 25/09/2023 | Edited on 25/09/2023

 

bala vanangaan first look update

 

பாலா தற்போது இயக்கி வரும் படம் 'வணங்கான்'. இதில் முன்பு சூர்யா கமிட்டாகி நடித்த வந்த நிலையில் சில காரணங்களால் விலகிவிட்டார். மேலும் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டியும் ஒப்பந்தமாகியிருந்த நிலையில் அவரும் விலகிவிட்டார். இதையடுத்து சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்யை வைத்து பாலா இயக்கி வந்தார். கன்னியாகுமரியில் படப்பிடிப்பு தொடங்கி பல்வேறு கட்டங்களாக பல இடங்களில் நடத்தி, தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்து வருவதாக தெரிகிறது. இப்படத்தில் அனைத்து பாடல்களுக்கும் வைரமுத்து வரிகள் எழுதுகிறார். 

 

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. போஸ்டரில் அருண் விஜய் சேரும் சகதியுமாக ஒரு கையில் பெரியார் சிலையுடனும் மறு கையில் பிள்ளையார் சிலையுடனும் நிற்கிறார். இப்படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவராத நிலையில், படக்குழு தற்போது போஸ்டரை பகிர்ந்து படக்குழுவை பற்றி குறிப்பிட்டுள்ளனர். சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்கின்றனர். கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்க சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இசைப்பணிகளை ஜி.வி பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். 

 

ஃபர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலா ஸ்டைலில் வித்தியாசமான இந்த போஸ்டர், ரசிகர்களின் கவனத்தை தற்போது ஈர்த்து வருகிறது.