Skip to main content

"பல்வேறு சூழ்ச்சிகள் நடக்கிறது..." கலைஞர் நினைவுநாளில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு!

Published on 08/08/2020 | Edited on 08/08/2020

 

Periyasamy - dindugal

 

மறைந்த தமிழக முதல்வரும், தி.மு.க முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகையின் முன்பு கலைஞரின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தி.மு.க. துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ. பெரியசாமி கலைஞர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மேற்கு மாவட்டச் செயலாளரும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான சக்ரபாணியும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்.

 

இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி, 'தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு சூழ்ச்சிகள் நடக்கிறது. இந்த மோசமான எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை ஒழிக்க வேண்டும். கலைஞர் 70 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் உழைத்திருக்கிறார் அதேபோல் கழகத் தலைவர் ஸ்டாலினும் உயிரைக் கொடுத்து மன உறுதியோடு உழைத்து வருகிறார். அதனால் தலைவரையும் தளபதியையும் மனதில் நினைத்துக்கொண்டு கருத்து வேறுபாடுகளைக் கடந்து வரும் தேர்தலில் மன உறுதியோடு உழைத்து கழகத் தலைவரை முதல்வராக்க பாடுபட வேண்டும். இதுதான் கலைஞரின் இந்த இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் நாங்கள் அனைவரும் எடுத்துக்கொண்ட வீரசபதம்' என்று கூறினார்.

 

இதில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி. முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன். கிழக்கு மாவட்டத் துணைச் செயலாளரான நாகராஜ். தண்டபாணி மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ஜெயன். திண்டுக்கல் யூனியன் முன்னாள் சேர்மன் சந்திரசேகர். முன்னாள் நகரமன்றத் தலைவர் பஷீர் அகமது. ரெட்டியார்சத்திரம் முன்னாள் ஒன்றியத் தலைவர் சத்தியமூர்த்தி. நகரச் செயலாளர் ராஜப்பா. ஒன்றியச் செயலாளர் நெடுஞ்செழியன். யூனியன் சேர்மன் ராதா .விவேகனந்தன் உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

“இந்தியா கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களை பிடித்து ஆட்சி அமைக்கும்” -அமைச்சர் ஐ.பெரியசாமி!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை வாக்குப்பதிவு ஓரளவுக்கு நடந்து வருகிறது. காலை ஏழு மணிக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கள்ளிமந்தையத்தில்  தனது வாக்கை பதிவு செய்தார். அதுபோல் சி.பி.எம் வேட்பாளர் சச்சிதானந்தம் ராமலிங்கம்பட்டியில் தனது ஓட்டை பதிவு செய்தார்.

அதைத் தொடர்ந்து தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது மனைவி சுசிலாவுடன் உடன் திண்டுக்கல் கோவிந்தாபுரம் ஸ்ரீவாசவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

India alliance will form a government by capturing more than 350 seats  says I. Periyasamy

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும் போது, “இந்தியா கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி  மத்தியில் ஆட்சி அமைக்கும். வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிர்ப்பு அலைகள் அதிகமாக உள்ளது. 150க்கும் குறைவான இடங்களை பாரதிய ஜனதா கட்சி கைப்பற்றும். எப்பொழுதும்  போலவே  குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை ஆற்ற வந்துள்ளேன்” என்று கூறினார்