Skip to main content

திண்டுக்கல் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்கியது எப்படி! புதுமுக வேட்பாளரை இறக்கும் ஐ.பி!

Published on 15/03/2019 | Edited on 15/03/2019
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளில் வேடசந்தூர் நீங்கலாக திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, நத்தம், ஆத்தூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் கொண்டதுதான் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி.
 
 
இத்தொகுதியில் உள்ள ஆத்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக ஐ.பெரியசாமியும், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினராக சக்கரபாணியும், பழனி சட்டமன்ற உறுப்பினராக செந்தில்குமாரும், நத்தம் சட்டமன்ற உறுப்பினராக ஆண்டி அம்பலம் என நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கைப்பற்றி திண்டுக்கல் மாவட்டத்தை திமுக கோட்டையாக உருவாக்கி உள்ளனர்.
 
dmk

 

 
இந்த நிலையில்தான் பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் திண்டுக்கல் தொகுதியை கேட்டு காங்கிரஸ் போராடி வந்தனர் அதிலேயும் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் கார்த்தி சிதம்பரம், இளங்கோவன், குஷ்பு போன்ற முக்கிய தலைவர்கள் போட்டிபோட உள்ளனர் என்றும் பேச்சு பரவலாக எதிரொலித்து வந்தது. ஆனால் கழக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி மற்றும் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் உள்பட மாவட்ட நிர்வாகிகள் பலர் இத்தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கக் கூடாது திண்டுக்கல் மாவட்டத்தையே திமுக கோட்டையாக உருவாக்கி நான்கு சட்டமன்ற தொகுதிகளை தக்கவைத்து  வைத்திருக்கிறோம்  அப்படி இருக்கும்போது இத்தொகுதியை  திமுகவுக்குத்தான் ஒதுக்க  வேண்டுமென தலைவர் ஸ்டாலினிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
 
dmk

 

 
 
அதன் அடிப்படையில்தான் திமுக-காங்கிரஸ் கூட்டணியின்  இறுதி கட்ட பேச்சு வார்த்தையில் திமுக தலைவர் ஸ்டாலினும் திண்டுக்கல் தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக்கொடுக்க முடியாது திமுக தான் போட்டி போடும் என வெளிப்படையாகவே சொல்லி விட்டார். அதன் அடிப்படையில் தான் திண்டுக்கல் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதைக்கண்டு ஐ.பெரியசாமி, சக்கரபாணி, செந்தில்குமார், ஆண்டிஅம்பலம் ஆகிய நான்கு எம்எல்ஏக்களும் மாவட்ட பொறுப்பில் உள்ள சில  உபிகளும் தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர். இப்படி தலைவரிடமும், காங்கிரசுடனும் போராடி திண்டுக்கல் தொகுதியை திமுகவுக்கு கழகத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் முப்பெரும் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி வாங்கி இருக்கிறார்.
 
       dmk

 

 
 
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை 1952-ல் பாராளுமன்ற தொகுதி உருவான காலத்திலிருந்து 2019 வரை 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் 1967-ல் திமுக பாராளுமன்ற உறுப்பினராக அன்புச்செழியன் வெற்றி பெற்றிருக்கிறார் அதைதொடர்ந்து 1971-ல் ராஜாங்கமும் 1980-ல் மாயத்தேவர் என மூன்று முறை இத் தொகுதியை திமுக தக்கவைத்துள்ளது.
 
 
அதுபோல் காங்கிரசும் இத்தொகுதியில் திமுக கூட்டணி கட்சிகளுடன் ஐந்து முறை வெற்றி பெற்றிருக்கிறது. இப்படி திமுக காங்கிரஸ் கூட்டணி இத்தொகுதியில் எட்டு முறை வெற்றி பெற்றிருக்கிறது. அந்த அளவுக்கு திமுகவின் செல்வாக்கை வைத்து காங்கிரசும் இத்தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலில் திமுக இத்தொகுதியில் போட்டியிட்டு குறைந்த ஓட்டு வித்தியாசத்தில்தான் காந்திராஜன் தோல்வியைத் தழுவினார். அதனாலதான் இந்த பாராளுமன்ற தேர்தலில் அவசியம் திமுக வெற்றி பெறும் என ஐ.பி. உள்பட மாவட்ட பொறுப்பாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அதன் அடிப்படையில் தான் திண்டுக்கல் தொகுதி திமுகவுக்கு  கொடுக்கப்பட்டுள்ளது. இப்படி திமுக கோட்டையாக உள்ள திண்டுக்கல் தொகுதியில் உடன்பிறப்புகள் போட்டி போடுவதற்காக முன்னாள் துணை சபாநாயகர் காந்திராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன், சாணார்பட்டி முன்னாள் ஒன்றிய செயலாளர் விஜயன், பழனி முன்னாள் சேர்மன் வேலுமணி உள்பட 20க்கும் மேற்பட்ட உ.பி.கள் சீட் கேட்டு விருப்பமனு தாக்கல் செய்து அதன் அடிப்படையில் நேர்காணலுக்கும் சென்றுவிட்டு வந்து இருக்கிறார்கள்.
 
dmk

 

இப்படி தலைவர் ஸ்டாலின் நடத்திய நேர்காணலில் கலந்து கொண்ட உடன்பிறப்புகள் அனைவருமே ஐபி ஆதரவாளர்கள் என்பதால்  சீட்டு வாங்குவதற்கும் போட்டி போட்டு வருகிறார்கள். இருந்தாலும் தற்பொழுது உள்ள அரசியல் சூழ்நிலை வாக்காள மக்களின் மனநிலையை பொறுத்து யாரை? நிறுத்தினால் வெற்றி பெற முடியும் என ஐ.பெரியசாமி தொடர்ந்து கட்சி மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை செய்து வருகிறார். அதன் அடிப்படையில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் மூலம் விருப்பமான  கட்டிய கட்சி பொறுப்பாளர்களில்  மேற்கு அல்லது கிழக்கு பகுதியில் உள்ள ஒரு உடன் பிறப்புக்கு  சீட்டுகொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும்  புதுமுகமான உடன் பிறப்பு அப்படிபட்ட புதுமுகம் வேட்பாளரைதான் ஐ.பி.தேர்தல் களத்தில் இறக்க தயாராகி வருகிறார் என்ற பேச்சும் பரவலாக எதிர்ஒலித்து வருகிறது. அதன் மூலம் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியை திமுக கோட்டையாக உருவாக்க திமுக உடன்பிறப்புக்களும் தேர்தல் களத்தில் குதிக்க தயாராகி வருகிறார்கள்.
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.