Skip to main content

கோட்டை மாரியம்மன் மாசி திருவிழா; மகிழ்ச்சியில் பக்தர்கள் 

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

dindigul kottai mariamman temple festival

 

திண்டுக்கல்லில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு மாசி திருவிழா நேற்று  மாலை பூத்த மலர் பூ அலங்கார மண்டகப்படி உடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக திருக்கோயிலின் உள்பிரகாரம் முழுவதும் வண்ண வண்ண கோலமிட்டு சாமி உருவங்கள் பக்தர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

 

கோட்டை மாரியம்மன், மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தது. மேலும் பூத்த மலர் பூ அலங்கார மண்டகப்படி குழுவினரின் சார்பாக நேற்று கோயில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட விஷ்ணு துர்க்கை அம்மன்  வீற்றிருக்க வலது புறம் சரஸ்வதியும் இடதுபுறம் மகாலட்சுமியும் இருப்பது போல் மாசி திருவிழாவின் தொடக்க நாள் நிகழ்ச்சியாக சிறப்பு அலங்காரங்களுடன் காட்சி அளித்தார். கோவில் வளாகத்தில் வண்ணப் பொடிகள் மற்றும் பூக்களால் வரையப்பட்டிருந்த மாசாணி அம்மன், வரலட்சுமி நோன்பு செட், வராஹி அம்மன்,  சிவலிங்கம் உள்ளிட்ட சாமி உருவங்களை பக்தர்கள்  நீண்ட வரிசையில்  காத்திருந்து பார்வையிட்டு தரிசனம் செய்தனர்.

 

அதைத் தொடர்ந்து தான் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக  இன்று காலையில் கோட்டை மாரியம்மன் பூவால் அலங்கரிக்கப்பட்ட பூத்தேரில் நகரில் உள்ள முக்கிய வீதிகளான மேற்கு ரத வீதி. பழனி ரோடு. கிழக்கு ரத வீதி என முக்கிய வீதிகளில் கோட்டை மாரியம்மன் பவனி வந்ததைக் கண்டு ஆங்காங்கே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பெரும் திரளாக நின்று  உதிரிப் பூக்களை காணிக்கையாக செலுத்தி கோட்டை மாரியம்மனை தரிசித்தனர். மேலும் கோட்டை மாரியம்மன் பூத்தேரில் வருவதைக் கண்டு ஆங்காங்கே பக்தர்களுக்கு பிரசாதம் நீர் மோர் வழங்கப்பட்டது.

 

அதைத் தொடர்ந்து  வரும் 21 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை கொடியேற்றமும், வரும் மார்ச் மூன்றாம் தேதி பூக்குழி இறங்குதல் மற்றும் 4ம் தேதி தசாவதார விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் மாசி திருவிழா சிறப்பாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஊரடங்கு அனைத்தும் தளர்வுகள் செய்து நடைமுறை வாழ்க்கை தொடர்ந்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கோட்டை மாரியம்மனை சாமி தரிசனம் செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.