Skip to main content

திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்!

Published on 31/01/2020 | Edited on 31/01/2020

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பாக திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனையில் ரூபாய் 18 கோடி மதிப்பில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல சிறப்பு மைய கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலமாக தமிழக முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
 

இந்த விழாவில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் இயக்குனர் பூங்கோதை மற்றும் அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர்.சுரேஷ் பாபு உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். 

dindigul district government hospital new building opening cm


இந்த விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி, தனியார் மருத்துவமனைக்கு இணையாக கட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே திண்டுக்கல்லில் கடந்த ஆண்டு 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரசவங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த கட்டிடத்தில் ஒருங்கிணைந்த மகப்பேறு பச்சிளம் குழந்தைகளுக்கான ஐந்து தளங்கள் கொண்ட கட்டிடம் இதில் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த கட்டிடத்தில் பிரசவத்திற்கு முன்பும் பின்பும் மருத்துவம் பார்ப்பதற்கான அறைகளும் பச்சிளம் குழந்தைகள் அறை குழந்தைகள் பராமரிப்பு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு காத்திருப்பு அறை உணவகம் மற்றும் தனியான மருந்தகம் போன்ற தனித்தனி கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதுபோல், அதி நவீனமான மருத்துவமனை கட்டிடம் ஆகவும் நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனை தலங்களுக்கு செல்வதற்கு மின்தூக்கிகளும் பொருத்தப்பட்டு தனியாருக்கு நிகரான ஒரு அரசு மருத்துவமனை கட்டிடமாக திகழும்." இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.

dindigul district government hospital new building opening cm

ஆனால் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு கண்காணிப்பாளராக டாக்டர். சுரேஷ் பாபு வந்ததிலிருந்து மருத்துவமனையில் சில புதிய கட்டிங்கள் உருவாகி இருப்பதன் மூலம் தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் பயன் அடைந்தும் வருகிறார்கள். அதுபோல் உள்நோயாளிகளுக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


அந்த அளவுக்கு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருவதின் மூலம்தான் தற்போது தமிழக அரசும் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடங்களையும் உருவாக்கிக் கொடுத்து இருக்கிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.