Skip to main content

ஆத்தூர் காமராஜர் அணையில் தண்ணீர் இல்லாததால் செத்து மிதக்கும் மீன்கள்!

Published on 07/07/2019 | Edited on 07/07/2019

 

 திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் அமைந்துள்ளது ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம். இந்த காமராஜர் நீர்த்தேக்கத்திலிருந்து திண்டுக்கல் மாநகராட்சி சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள் மற்றும் ஆத்தூர், அக்கரைப்பட்டி, சீவல்சரகு, பிள்ளையார்நத்தம், வக்கம்பட்டி, பித்தளைப்பட்டி, எஸ்.பாறைப்பட்டி, வீரக்கல் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளின் நீர் ஆதாரமாக விளங்கும் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் மட்டம் அடிபாதாளத்திற்கு சென்று விட்டது. 

 

m

 

மைனஸ் 10 அடிக்கும் கீழே சென்று விட்டதாலும், ஆழ்துளை கிணறுகள் மூலம் குடிதண்ணீர் எடுக்கப்பட்டு, திண்டுக்கல் மாநகராட்சிக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதால் காமராஜர் அணை தற்போது திட்டுதிட்டாக மாறி தீவாக மாறிவிட்டது. இதனால் அணையில் விடப்பட்ட மீன்கள் செத்து மிதக்கின்றன. நேற்று முன்தினம் ஒரேநாளில் 18 டன் மீன்கள் (18 ஆயிரம் கிலோ) செத்து மிதந்ததால் மீன் ஏலதாரர் மற்றும் மீன் வியாபாரிகள் கண்ணீர் விட்டனர். 

 

வரலாறு காணாத வறட்சியால் மீன்கள் செத்து மிதப்பதாக மீன் வியாபாரிகள் கூறுகின்றனர். அணையை சுற்றி துர்நாற்றம் வீசி வருகிறது. உயிருடன் இருக்கின்ற மீன்களை காப்பாற்ற தினசரி 60டிராக்டர் தண்ணீர் அணையில் விட்டுவருகின்றனர். மூன்று நாட்களாக 180டிராக்டர் தண்ணீர் விட்டு உயிருடன் இருக்கும் மீன்களை பிடித்து வருகின்றனர். செத்து மிதக்கும் மீன்களை கரையில் போட்டு வைத்துள்ளனர். தற்போது செத்து கிடக்கும் மீன்களில் புழுக்கள் மொய்க்க தொடங்கிவிட்டன. இந்த தண்ணீரை பயன்படுத்தினால் தொற்றுநோய் பரவும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

 

m

 

அணையில் மீன்கள் இறந்து வருவது குறித்து மீன் ஏலதாரர் ஆறுமுகம் கூறுகையில் திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தில் மீன் பிடிக்க வருடத்திற்கு ரூ.27 லட்சம் என ஏலம் எடுத்திருந்தோம். ஆந்திராவிலிருந்து ரோகு, கட்லா, சில்வர்கெண்டை, ஜிலேபி, மிருகால், விரால் மீன்குஞ்சுகள் ஒன்றுக்கு ரூ.2.50 வீதம் விலைபேசி வாங்கி இனப்பெருக்கத்திற்காக கடந்த நவம்பர் மாதம் அணையில் விட்டிருந்தோம். ரூ.30 லட்சம் பெருமான மீன்குஞ்சுகள் நன்றாக வளர்ந்து மீன் பிடித்து வரும்பொழுது அணையின் தண்ணீர் மட்டம் குறைந்து கொண்டே வந்ததால் மீன்களின் இனப்பெருக்கம் குறைந்து வந்தது. தற்போது காமராஜர் அணையில் மைனஸ் 10 அடி ஆழத்திற்கும் கீழே தண்ணீர் சென்றுவிட்டது. 

 


இதனால் மீன்கள் இறந்து வருகின்றன. நேற்று முன்தினம் ஒரேநாளில் 18 டன் மீன்கள் இறந்து விட்டன என கண்ணீருடன் கூறினார். மாநகராட்சி நிர்வாகம் எங்களுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். வரலாறு காணாத வறட்சியால் தண்ணீர் மட்டம் குறைந்து வருவது விவசாயிகள் மட்டுமின்றி மீன் வியாபாரிகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அணைப்பகுதிக்கு பொதுமக்கள் யார் சென்றாலும் செத்து கிடக்கும் மீன்களில் மொய்க்கும் ஈக்கள் மற்றும் புழுக்கள் கடியால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் அணைக்கட்டு பகுதிக்கு பொதுமக்கள் செல்ல தடைவிதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அணையின் தண்ணீர் மீன் வாடையுடன் இருப்பதால் கடந்த 2 நாட்களாக மாநகராட்சி நிர்வாகம் தண்ணீர் எடுக்காமல் மின் மோட்டார்களை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது!

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.