Skip to main content

தர்மபுரி பள்ளி மாணவி பலி;பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் இதுதானோ?- ஸ்டாலின் டூவிட்!!

Published on 11/11/2018 | Edited on 11/11/2018
stalin twit

 

தர்மபுரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்டு வந்த சதீஷ் என்ற ரமேஷ் என்ற இருவரில் சதிஷ் என்றவரை  போலிஸார் தற்போது கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் டுவிட்டர் பதிவில், 

 

தர்மபுரியில் 17 வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த கொடூர செய்தி அறிந்து துயருற்றேன். மனிதம் இப்படி எல்லாம் வக்ரம் அடைந்து வருவது பெரும் வேதனை. இதற்கு காரணமானவர்களை உடனே கைது செய்ய வேண்டும். பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? என தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்