Skip to main content

தாயும் மகனும் எடுத்த விபரீத முடிவு; வீடு திரும்பிய தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

dharmapuri ottapatti village mother and son incident

 

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள ஒட்டப்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் (வயது 65). இவர் ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர். இவருக்கு சாந்தி (வயது 50) என்ற மனைவியும், விஜய் ஆனந்த் (வயது 30) என்ற மகனும் உள்ளனர். இன்ஜீனியரான விஜய் ஆனந்துக்கு இன்னும் திருமணமாகாமல் இருந்துள்ளார். இந்நிலையில் பழனிவேல் கடந்த சனிக்கிழமை உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்காக, பாலக்கோடு சென்றுள்ளார். அதன் பின்னர் திருமண நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரம் கதவைத் தட்டியும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.

 

இதனால் சந்தேகம் அடைந்து பழனிவேல், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது படுக்கை அறையில் மனைவி சாந்தி மற்றும் மகன் விஜய் ஆனந்த் இருவர் முகத்தில் பிளாஸ்டிக் கவர் சுற்றிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு அருகிலேயே இரண்டு கேஸ் சிலிண்டர்கள் திறக்கப்பட்ட நிலையில் இருந்தது. அந்த சிலிண்டர்களில் இருந்து குழாய் ஒன்று இருவரின் தலையைச் சுற்றிய பாலிதீன் கவருக்குள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்து சோதனை செய்தபோது, அவர்கள் உயிரிழந்து கிடந்த அறை முழுவதும் விஷவாயு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அங்கு இருந்த ஜன்னலில் 'உடனடியாக ஜன்னலை உடைத்து விட்டு, போலீசை அழைத்து வாருங்கள்' என பேப்பரில் எழுதி ஒட்டப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் ஜன்னல் கதவுகளைத் திறந்து விட்டுள்ளனர். மேலும் திறந்த நிலையில் இருந்த கேஸ் சிலிண்டரை மூடி உள்ளனர்.

 

இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட சோதனையில், விஜய் ஆனந்த் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தில், "நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் சிலருடன் சேர்ந்து ஜவுளி தொழில் செய்து வந்தேன். அதற்காக 25 லட்சம் ரூபாய் கொடுத்திருந்தேன். ஆனால் நண்பர்கள் என்னை ஏமாற்றியதோடு, நான் கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல், பல்வேறு முறைகளில் மன உளைச்சலை ஏற்படுத்தினர். இதுபற்றி காவல்துறை அதிகாரிகள் விரைவாகத் தீர்வு காண வேண்டும் என உங்கள் பாதங்களை வணங்கி கேட்டுக்கொள்கிறேன்" என இருந்தது. இதுபற்றி போலீசார் வழக்குப் பதிவு செய்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த அருண் (வயது 36) மற்றும் கார்த்திக் (வயது 34) ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.