Skip to main content

தர்மபுரியில் முதல் கரோனா தொற்று  உறுதி!  ஆட்சியரின் அலட்சியத்தால்  மருத்துவர்கள் அச்சம்!

Published on 23/04/2020 | Edited on 23/04/2020

கரோனா தொற்றே இல்லாத மாவட்டமாக இருந்த தர்மபுரி மாவட்டத்தில், முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  ட்


தருமபுரி மாவட்டம், கொசப்பட்டி ஊராட்சி, எலவடை கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர்,  சில நாட்களுக்கு முன்பாகதான் டெல்லியில் இருந்து, லாரி வேலையை முடித்துக்கொண்டு தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். வந்தவர் அதே ஊரிலேயே தேநீர் கடை நடத்தி நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அச்சம் அடைந்த மக்கள் தர்மபுரி மருத்துவமனைக்கு தொடர்புகொண்டுள்ளனர்.
 

 nakkheeran app



இதையடுத்து அவருக்கு  மூன்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதியில் அதில் பாஸிடிவ் ரிசல்ட் வந்துள்ளது.  இதனால் அப்பகுதியை  கரோனா பாதிப்பு உள்ள பகுதியாக அறிவித்துள்ளது. அதே போல அப்பகுதியில் உள்ள மக்கள் நிச்சயம் டீ சாப்பிட சென்று இருப்பார்கள் என்ற காரணத்தால், அந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கும் கரோனா டெஸ்ட் எடுக்க தயாராகி வருகிறார்கள். தற்போது டிரைவரின் கும்பத்தினரையும் தனிமைப்படுத்தி  பரிசோதனை செய்கின்றனர்.

இந்த கரோனா தொற்றுள்ளவரை அழைத்துவர ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மற்றும் உதவி நர்ஸ் யாருக்குமே போதுமான கோவிட் 19 பாதுகாப்பு கவசம் இல்லை. இதனால் அவர்கள் பணிக்குச் செல்ல அச்சப்பட்டுள்ளனர், அவர்களுக்கு சாதாரண மாஸ்க் மட்டும் கொடுத்து மிரட்டி அனுப்பியுள்ளனர். 

இது குறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் கேட்டபோது, “நாங்கள் ஓட்ட மாட்டோம் என்று சொல்லவில்லை, எங்களுக்கு போதுமான பாதுகாப்பு கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம்.  அதைகூட செய்யாமல் எங்களை மிரட்டி அனுப்புகிறார் மாவட்ட ஆட்சியர்’’ என்றார். 

இதுபோன்ற காலகட்டத்தில் அரசு இனிமேலும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்காவிட்டால், இன்னும் கூடுதல் விளைவை எதிர்கொள்ள வேண்டிய நிலைவரும் என்கிறார்கள் மருத்துவர்கள் .

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

திருமணத்தை மீறிய உறவு; குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Incident happened to children on love affair in dharmapuri

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(30). இவர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தேவி (24, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில், தேவிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ்(27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது. இவர்களது உறவு பாலகிருஷ்ணனுக்கு தெரியவர, தேவியைக் கண்டித்துள்ளார். இதனையடுத்து, தேவி திடீரென வெங்கடேஷ் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தேவியை பழிவாங்கும் நோக்கத்தில் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில், அவர் நேற்று முன் தினம் (10-04-24) வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த தேவியின் மகன்கள் இருவரையும் அங்குள்ள காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற வெங்கடேஷ், குழந்தைகள் இருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவியும், கல்லால் தலை மற்றும் காது பகுதிகளில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த குழந்தைகள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, தகவல் அறிந்து விரைந்து வந்த அதியமான்கோட்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி வெங்கடேஷை கைது செய்தனர். இந்த நிலையில், காவல் நிலையத்தில் இருந்த வெங்கடேஷ் நேற்று, காவல் நிலையத்திற்கு பின்புறமுள்ள ரயில்வே தண்டவாளத்திற்கு தப்பிச் சென்று அங்குள்ள மின் கம்பியைப் பிடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெங்கடேஷ் மீது மின்சாரம் தாக்கியதில், அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனடியாக அங்கு விரைந்த போலீசார், வெங்கடேஷை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.