Skip to main content

நிறம் மாறிய தாமிரபரணி... கலக்கத்தில் மக்கள்!

Published on 23/05/2020 | Edited on 23/05/2020
 dhamira bharani changed color ...

 

நெல்லை மாவட்டத்தின் அம்பை நகரையொட்டிய தென்மேற்கு தொடர்ச்சி மலையின் சுமார் 6500அடி உயரத்திற்கும் மேலான அகஸ்தியர் மெட்டுப் பக்கமுள்ள சதுப்பு நிலக் காடுகளில் உற்பத்தியாகிப் பெருகித் தரையிறங்குகிறது வற்றாத ஜீவநதியான தாமிரபரணி. அது முதன் முதலாகத் தலையணை வழியாகத் தரையிறங்கி பாபநாசம் வழியாகப் பாய்கிறது. நெல்லை,தூத்துக்குடி தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களின் விவசாயம் மற்றும் மக்களின் குடிநீர் ஆதராமாகவும் பயன்பாட்டிலிருந்த தாமிரபரணி பின்பு ராமநாதபுரம்,விருதுநகர் உள்ளிட்ட மாவட்ட மக்களின் தாகத்தையும் தீர்ப்பதில் உயிர்நாடியாகவே இருக்கிறது.


காலம் காலமாகக் கோடை மற்றும் மழைக்காலங்களில் நிறம் மாறாத தாமிரபரணியின் தண்ணீர் கடந்த இரண்டு நாட்களாக மக்களின் பயன்பாட்டிற்காக சப்ளை செய்யப்பட்டதில் மண்கலந்த செந்நிறமாக வந்திருக்கிறது. ஆரம்ப கட்ட வி.கே.புரம் பகுதி தொடர்ந்து வடபக்கமான தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரம் வரை சப்ளையானதில் தண்ணீர் செந்நிறமாக காணப்பட்டது மக்களிடையே கலக்கத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்திவிட்டது.

முன்னெப்போதும் இப்படி வந்ததில்லை தண்ணீருடனிருக்கும் இந்தப் பாத்திரத்தைங்களைப் பாருங்கள் சிகப்பாகவே இருக்கிறது. அதைக் குளிப்பதற்கோ,முக்கியமாகக் குடிப்பதற்கோ எப்படிப் பயன்படுத்த முடியும். பயமாக இருக்கிறது என்கிறார் சங்கரன்கோவிலைச் சேர்ந்த காயத்ரி. இதனிடையே சில இடங்களில் இந்த செந்நீரைக் கொண்டு குளித்த போது உடலின் தோல் பகுதியில் அரிப்பு எடுக்கிறது என்கிற புகாரும் அம்பைப் பகுதியின் அதிகாரிகளிடம் மக்கள் தெரிவித்தாகவும் குறிப்பிடுகின்றனர்.

இது போன்ற புகார்கள் கிளம்பிய உடனேயே நெல்லை மாவட்டக் கலெக்டரான ஷில்பா அதிகாரிகளை அனுப்பி உடனடி ஆய்வு நடத்தப் பணித்திருக்கிறார்.

கடந்த 11ம் தேதி முதல் தொடர்ந்து பொதுப்பணித்துறை மற்றும் விவசாயம் பொருட்டு சேர்வலாறு, காரையாறு அணைப்பகுதிகளிலிருந்து பயன்பாட்டுக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், அணையின் நீர் இருப்பு கோடை வறட்சி காரணமாகக் குறைந்தது. காரையாறு அணையின் அடிப்குதியில் உள்ள மதகிலிருந்து நீர் திறந்து விடப்படுவதால் அணையின் கீழ்ப்பகுதியில் சேர்ந்துள்ள சகதி,மண்,இலை,தழைகள் மற்றும் மட்கிப் போன மரப்பாகங்கள் கலந்து வருவதால் நீரின் நிறம் மாறியுள்ளது. ரசாயன கழிவுகள் ஏதும் கலக்கவில்லை. அதிக நீர் வெளியேற்றத்தின் காரணமாக தாமிரபரணி நீர் இயல்பு நிலைக்கு மாறிவருகிறது. எனவே பொது மக்கள் அச்சப்படத் தேவையில்லை என்கிறார் நெல்லை மாவட்ட கலெக்டரான ஷில்பா.

 

 


ஆனாலும் நீரின் நிறம் எப்போது இயல்பு நிலைக்கு வருமோ என்கிற அச்ச உணர்வு மக்களை விட்டகலவில்லை என்பதே யதார்த்தமாக இருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

தண்ணீர் தேடிச் செல்லும் வன விலங்குகள் பலியாகும் துயரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Tragedy of wild animals lost life in search of water

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளிலும் தண்ணீர் இன்றி மரங்கள் கருகி வருவதுடன் வனவிலங்குகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள வனப்பரப்புகள் மற்றும் கீரமங்கலம் மற்றும் சேந்தன்குடி, குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மற்றும் தைலமரக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனால் பலமரக்காடுகளில் இருந்த முயல், மான், மயில்கள், குருவிகள், பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தற்போது தைலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மரக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் காடுகளில் வன உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தக் காடுகளில் உள்ள மான் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் போது நாய்களால் கடித்து குதறப்படுகிறது. அதேபோல தண்ணீர் தேடி சாலையைக் கடக்க முயலும்போது வாகனம் மோதி பலியாகிறது. இதேபோல புதுக்கோட்டை  மாவட்டத்தில் திருமயம், கீரமங்கலம் என மாவட்டம் முழுவதும் பல விபத்து சம்பவங்களில் மான்கள், மயில்கள் போன்ற உயிரினங்கள் பலியாகி வருகிறது. இதேபோல வியாழக்கிழமை கீரமங்கலம் பகுதியில் இருந்து தண்ணீர் தேடிச் சென்ற ஒரு மான் திசை மாறி பேராவூரணி பக்கம் சென்றுள்ளது. அந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆகவே, கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் காடுகளில் சுற்றித்திரியும் பறவைகள், வன உயிரினங்களுக்கு இரையும், தண்ணீரும் கிடைக்காமல் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வரும் மயில், மான் போன்றவற்றை நாய்கள் கடிப்பதும், விபத்துகளில் சிக்கி பலியாவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால்  ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் சில இடங்களில் கோடைக்காலம் முடியும் வரை தண்ணீர் தொட்டிகள் அமைத்து வன உயிரினங்களைப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காமல் இப்படி வெளியில் வந்து விபத்துகளில் சிக்கி பலியாகிறது. ஆகவே வனத்துறை தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். கோடை வெயிலில் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைப்பது போல வன உயிரினங்களின் தாகம் தீர்க்கவும் உயிர் காக்கவும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்கின்றனர் இளைஞர்களும் விவசாயிகளும்.

மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது சில நாட்கள் தண்ணீர் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தண்ணீர் வைத்து பராமரிப்பு செய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் JJ வடிவத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் கூட தண்ணீர் இல்லை. வனவிலங்குகளை காக்க தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.