Skip to main content

டி.ஜி.பி. பணியிடை மாற்றம்..!

Published on 25/02/2021 | Edited on 25/02/2021

 

DGP Interim change

  

டி.ஜி.பி.களின் மீது குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், மதுவிலக்கு டி.ஜி.பி. பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் வந்த தலைமை தேர்தல் அதிகாரி, “தமிழகத்தில் மதுவிலக்குப் பிரிவு சரியாக செயல்படவே இல்லை. மதுபானங்களை மொத்தமாக பதுக்கிவைக்கும் பணி குறையவும் இல்லை. மதுவிலக்கு குற்றத்தில் ஈடுபட்ட பெரிய முதலாளிகளை ஏன் கைது செய்யவில்லை. கூலி ஆட்களை மட்டுமே கைது செய்துள்ளீர்கள்” என்று உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரிடமும், மதுவிலக்குப் பிரிவு சிறப்பு டிஜிபி ஷகீல் அக்தரிடமும் கேள்விகளை எழுப்பியதோடு, இதற்கான ஆய்வு அறிக்கையையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையர் எச்சரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

அதைத் தொடர்ந்து முக்கிய நிர்வாகிகளோடு தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், மதுவிலக்கு ஆணையர் மற்றும் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆகிய இரு பதவிகளை வகித்து வந்த மோகன், அதிரடியாக மதுவிலக்கு ஆணையர் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். தற்போது குடிசை மாற்று வாரிய உறுப்பினர் செயலாளராக உள்ள கிர்லோஷ்குமார், மதுவிலக்கு ஆணையர் பதவியைக் கூடுதலாக கவனிப்பார் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடந்து தலைமை தேர்தல் ஆணையரிடம் இது தொடர்பான ஆய்வு அறிக்கையைச் சமர்பித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தெலங்கானா டிஜிபி இடைநீக்கம்; தேர்தல் ஆணையத்தின் அடுத்த நடவடிக்கை!

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
Suspension order of Telangana DGP revoked for Meeting with CM  Revanth Reddy;

தெலங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பல கட்டங்களாகத் தேர்தல் நடந்து முடிந்தது. இதனையடுத்து, மிசோரம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மேலும், தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று முதன் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல், கடந்த 4 ஆம் தேதி மிசோரமில் நடந்த வாக்கு எண்ணிக்கையில், மிசோரம் மக்கள் இயக்கம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

அந்த வகையில் தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் காங்கிரஸ் 64 இடங்களையும், பிஆர்எஸ் 39 இடங்களையும், பாஜக 8 இடங்களையும், ஏஐஎம்ஐஎம் கட்சி 7 இடங்களையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து தெலங்கானாவில் கடந்த 7 ஆம் தேதி முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது மாநிலத்தின் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து சில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் போது காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வந்தது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கிறது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமார், ரேவந்த் ரெட்டியை சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதன் மூலம், தேர்தல் விதிகளை மீறியதாக டிஜிபி அஞ்சனி குமாரை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. 

தற்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கி கொள்ளப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தில் தெலுங்கானா டிஜிபி அஞ்சனி குமாரின் இடைநீக்கத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. மேலும், அவர் மீண்டும் அவரது பணியை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

முன்னாள் டிஜிபி மீது வழக்குப்பதிவு

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Case registered against former DGP

 

தமிழக முதல்வர் பற்றிய அவதூறு கருத்துக்களை பரப்பியதாக முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழக முதல்வர் சொல்லாத கருத்துகளை சொல்லியதாக அவதூறு பரப்பியதாக முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்எல்ஏவுமான நட்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக மத்திய மாவட்ட வழக்கறிஞர் அணியினர் திருச்சி எஸ்.பி அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தனர்.

 

அந்த புகாரில் 'இந்துகள் வாக்கு வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாக பொய் செய்தியை நடராஜன் வாட்ஸப் அப் குழுக்களில் பரப்பியதாகவும், முதல்வர் கூறாத ஒன்றை கூறியதாக அவதூறு பரப்பும் அவர் மீது நடவடிக்கை என கூறப்பட்டது. இந்நிலையில், முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது ஏழு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.