Skip to main content

டெங்கு கொசு உருவாகி, சிறுமி பலிக்கு காரணமான பள்ளிக்கு 1 லட்சம் அபராதம்!

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

வேலூர் மாவட்டம், பள்ளிக்கொண்டாவில் உள்ள சிக் ஷா கேந்திரா என்கிற மெட்ரிக் மற்றும் ஐ.சி.எஸ்.ஏ பள்ளியில் வெட்டுவாணம் கிராமத்தை சேர்ந்த நட்சத்திரா என்கிற 4 வயது சிறுமி எல்.கே.ஜி படித்து வந்தார். அந்த மாணவி டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு கடந்த 15ந்தேதி இறந்தார்.

 

Dengue mosquito breaches to penalty to school'

 

இது தொடர்பாக சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வருவாய்த்துறை நடத்திய தனித்தனி விசாரணையில் அந்த குழந்தை படித்த பள்ளியில் இருந்துதான் டெங்கு கொசு உற்பத்தியாகி அது கடித்து அந்த மாணவிக்கு டெங்கு வந்து மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார் என்பதை ஆய்வுகள் மூலம் கண்டறிந்தனர்.

அதனை தொடர்ந்து அந்த பள்ளி சுகாதாரமற்ற முறையில் இருந்ததாக குற்றம்சாட்டி, பள்ளிக்கொண்டா பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் தங்களது பகுதியை சுத்தமாக, தூய்மையாக, நீர் தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியும், அதனையும் மீறி செயல்பட்டு டெங்கு பரவ காரணமாக இருந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் அதிகாரிகள்.

 

Dengue mosquito breaches to penalty to school'

 

பொதுசுகாதார சட்டம் 1939ன் படி, திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016ன்படி இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 24 மணி நேரத்தில் அபராதம் செலுத்த வேண்டும், பள்ளி பகுதியை தூய்மைப்படுத்த வேண்டும் என எச்சரிக்கை நோட்டீஸ்சும் விடப்பட்டுள்ளது.

பிரபலமான பள்ளி மீது நடவடிக்கை எடுத்துயிருப்பது மற்ற பள்ளி, கல்வி நிறுவனங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
Holiday notification for only 7 schools in Mayiladuthurai

மயிலாடுதுறை நகரில் நேற்று (02-04-24) இரவு மிகப் பெரிய சிறுத்தை ஒன்று தென்பட்டதையடுத்து சி.சி.டி.வி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை தென்பட்ட கூறைநாடு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை நகரத்தின் ஒருபகுதியான கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று (02-04-24) இரவு  11 மணிக்கு  சிறுத்தை நடமாடியதைப் பார்த்ததாகச் சிலர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினரும், வனத்துறையினரும் சிறுத்தை நடமாட்டம் உள்ள கால் தடத்தை வைத்து சிறுத்தை சென்றதை உறுதி செய்தனர். பிறகு சி.சி.டி.வி கேமராவில் சிறுத்தையை நாய்கள் விரட்டி சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து, நள்ளிரவு முதல் வனத்துறை சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும், சீர்காழி வனச்சரக அலுவலர் டேனியல் ஜோசப் தலைமையில் வனத்துறையினர் கையில் வலைகளுடன் தேடி வருகின்றனர். அதில், சிறுத்தை பதுங்கிய பகுதியில் பன்றி ஒன்று குதறியநிலையில் இறந்து கிடந்ததைக் கண்ட வனத்துறையினர் அதிர்ச்சியடைந்து தேடுதல் வேட்டையை தீவிரமாக்கியுள்ளனர். இதற்கிடையில் சிறுத்தை நடமாட்டம் உள்ள கூறைநாடு பகுதியில் உள்ள பால சரஸ்வதி மெட்ரிகுலேஷன் என்கிற தனியார் பள்ளிக்கு அந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி விடுமுறை இன்று (3.4.2024)  அளித்திருந்தார்.

இந்த நிலையில் சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக மயிலாடுதுறை நகரில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை(4.4.2024) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உத்தரவிட்டுள்ளார். மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு காவல்துறை, தீயணைப்புத்துறை பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.  

Next Story

பிரபல தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Ooty famous private schools email incident

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள இரு பிரபல சர்வதேசத் தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் இன்று (19.03.2024) மதியம் 02.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மோப்ப நாய் உதவியுடன் 3 வெடிகுண்டு செயலிழப்பு போலீசார் சம்பந்தப்பட்ட பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அதே சமயம் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து பள்ளியில் இருந்து மாணவர்களைப் பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். போலீசார் மேற்கொண்ட சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது வதந்தி என்பது தெரிய வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியிலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னையில் உள்ள அண்ணா நகர், பாரிமுனை, கோபாலபுரம், ராஜா அண்ணாமலைபுரம், ஜெ.ஜெ. நகர், திருமழிசை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் 13 தனியார் பள்ளிகளுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி (08.02.2024) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.