Skip to main content

டெங்கு காய்ச்சலால் ஒருவர் பலி; பீதியில் நாகை மக்கள்

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

"நாகை மாவட்டத்தில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கபட்ட 77 பேர் குணமடைந்து  மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். காய்சலுக்காக பொதுமக்கள் யாரும் தனியார் மருத்துவமனைக்கு செல்லவேண்டாம்" என நாகை மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் கலா கூறியுள்ளார்.

 

Dengue fever Nagai people in panic


நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, திருக்குவளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவிவருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள 12 அரசு மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், போதுமான படுக்கை வசதிகள் இல்லாத நிலையில் வராண்டா மற்றும் கூடுதல் அறைகள் ஒதுக்கப்பட்டும் நோயாளிகளை மருத்துவர்கள் கண்காணித்து வருவதால், சமாளிக்க முடியாமல் மருத்துவர்கள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில் மயிலாடுதுறையை சேர்ந்த ஆசிரியை ஒருவர் டெங்கு காய்ச்சலால் இறந்துபோனார். மக்களை காக்காத அரசை கண்டித்து பொதுமக்களும், ஆசிரியையின் உறவினர்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

Dengue fever Nagai people in panic

 

இதற்கிடையில் நாகை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் கலா பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறுகையில்," கடந்த அக்டோபர் மாதம் 25,680 பேர் வெளி நோயாளிகளாகவும், 6664 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று இவர்களில் 77 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி சுமார் 8000 க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும், சுமார் 3000க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக இருக்கின்றனர். அவர்களில் நாகை மாவட்டத்தில் 4 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதிபடுத்தியுள்ளோம் கூடுதல் இரசாயன வேதி பொருட்கள் உள்ளிட்ட அதி நவீன உபகரணங்கள் கூடுதலாக தமிழக அரசால் நாகை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. காய்ச்சல் ஏற்பட்டால் தனியார் மருத்துவமனைக்கு செல்லாமல் அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் வரவேண்டும்," என அவர் கூறியுள்ளார்.

 

Dengue fever Nagai people in panic

 

மயிலாடுதுறையில் கடந்த சிலமாதங்களாகவே பாதாளசாக்கடை அங்காங்கே உடைந்தும், வழிந்தும் சாக்கடையாக தெருக்களிலும், சாலைகளிலும் ஓடுகிறது, அவற்றில் இருந்து தூர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி நடமாடவே முடியாமல் திணறடித்துவருகிறது, அப்படி பாதாளசாக்கடை உள்வாங்கி சாக்கடை வழிந்தோடிய தெருவில் குடியிருந்த ஆசிரியைதான் தற்போது டெங்குகாய்ச்சலால் பலியாகியுள்ளார் அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்," என்கின்றனர்.

இதற்கிடையில் மயிலாடுதுறை நகராட்சியின் அவலத்தைக் கண்டித்து மெரினா புரட்சிபோல போராட்டம் நடத்த திட்டமிட்டு நோட்டீஸ் வினியோகித்தும், வாட்சாப்,பேஸ்புக் மூலமும் கொடுத்துவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் பரவும் வதந்தி; காவல்துறை எச்சரிக்கை!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
The spread in Tamil Nadu; Police alert

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அண்மையில் சென்னையில் ஐடி துறையில் பணியாற்றும் திருநங்கை ஒருவர் இரவில் உணவகத்தில் சாப்பிட்டு விட்டு வரும் பொழுது அவரின் வினோத தோற்றத்தால் குழந்தை கடத்த வந்த நபர் என பிடித்த சிலர், அவரை அரை நிர்வாணமாக மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய காட்சிகள் வைரலாகி இருந்தது.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ராந்தம் சோதனை சாவடி பகுதியில் வடமாநில இளைஞர் ஒருவர் குழந்தையைக் கடத்த முயன்றதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சிக்கிய இளைஞரை தாக்கினர். அதன் பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை அங்கிருந்து கூட்டிச் சென்றனர். அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

nn

அதனைத் தொடர்ந்து நேற்று திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிப்பட்டியில் குழந்தை கடத்த வந்தவர் என இளைஞர் ஒருவரை அப்பகுதி மக்கள் அடித்து தாக்கினர். அங்கு வந்த போலீசார் அந்த இளைஞரை மீட்டு 108 வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் கொண்டு செல்லப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பிடிபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவரை போல உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

nn

இந்நிலையில் நாகை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைகளை கடத்த வட மாநில கும்பல் வந்துள்ளதாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்று சமூக வலைத்தளங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் செய்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

போகுமிடமெல்லாம் ஆளுநருக்கு கருப்புக்கொடி; போலீசார் குவிப்பு

Published on 28/01/2024 | Edited on 28/01/2024
A black flag for the governor wherever he goes; Police build up

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

நாகை மாவட்டத்தில் வெண்மணி, வேளாங்கண்ணி, நம்பியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தமிழகம் முழுவதும் ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் மூன்று இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

காலையிலேயே கீழ்வெண்மணி நினைவிடப் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில் தொடர்ச்சியாக ஆளுநர் கலந்து கொள்ள இருக்கக்கூடிய இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மனிதநேய மக்கள் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போலீசார்கள் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றனர்.