Skip to main content

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Published on 31/10/2023 | Edited on 31/10/2023

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்தும், இஸ்ரேலின் ராணுவ தாக்குதலை நிறுத்தக் கோரியும் செவ்வாய் (அக்.31) சைதாப்பேட்டையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் பி.சுகந்தி, இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநிலத் தலைவர் மஞ்சுளா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

 

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேலின் கொடூர ராணுவ தாக்குதலை நிறுத்த வலியுறுத்தியும், ஐ.நா.தீர்மானத்தை ஆதரிக்காத மோடி அரசைக் கண்டித்தும் செவ்வாயன்று (அக்.31) சென்னையில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாநிலத் தலைவர் தோ.வில்சன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடையின் செயல் தலைவர் எஸ்.நம்புராஜன், சங்கத்தின் பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி உள்ளிட்டோர் பேசினர்.

 

 

சார்ந்த செய்திகள்