Skip to main content

நடமாடும் கரோனா தடுப்பூசி வாகனத்தை துவங்கிவைத்த தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி

Published on 23/08/2021 | Edited on 23/08/2021

 

Delhi Special Representative of the Government of Tamil Nadu launches mobile corona vaccine vehicle

 

திருவாரூரில் நடமாடும் கரோனா தடுப்பூசி வாகனத்தை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் கொடியசைத்துத் துவக்கிவைத்தார்.

 

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவிய நிலையில், தமிழ்நாடு அரசு எடுத்து வரும் முயற்சியால் தற்போது வெகுவாக நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், கரோனாவில் இருந்து முழுமையாக விடுபடுவதற்காக பொதுமக்கள் தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டிவருகின்றனர். அரசு மருத்துவமனைகள், ஆரம்பச் சுகாதார நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் பொதுமக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 

 

இந்நிலையில் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் இலவசமாக அனைத்து இடங்களிலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நடமாடும் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நடமாடும் கரோனா தடுப்பூசி வாகனத்தை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியும் முன்னாள் எம்.பி.யுமான ஏ.கே.எஸ். விஜயன் கொடியசைத்துத் துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாட்ஸ்அப்பில் பரவிய வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
A rumor spread on WhatsApp; TN Fact Finding Committee Explained

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் மற்றும் நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இதனால் பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அச்சமடைந்து ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர் என செய்தி வெளியாகியது. மேலும், விமான விபத்து நடந்ததாக வாட்ஸ்அப் குழுக்களிலும் வதந்தி செய்தி பரவியது. இதனால் திருவாரூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “மேற்கண்ட தகவல் பொய்யானது. இந்திய விமானப்படை தஞ்சையில் இருந்து கோடியக்கரை வரை விமான ஒத்திகையை நடத்தியுள்ளது. விமானம் புறப்படும் போது காற்று உயர் அழுத்தத்தில் விடுவிக்கப்படும் (Airlock Release). இதன் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியை நில அதிர்வு எனத் தவறாக பரப்பி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்த முறையான முன்னறிவிப்பானது விமானப்படை தரப்பில் முன்பே காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான விபத்து நிகழ்ந்ததாகவும் பொய்யான புகைப்படங்களும் பரவி வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் ஆயுதங்கள்; 4 பேர் கைது

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
BJP district executive's car; 4 arrested

திருவாரூரில் பாஜக மாவட்ட நிர்வாகியின் காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்த நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நின்றுகொண்டிருந்த பாஜக மாவட்ட துணைத் தலைவர் சதா.சதீஷ் என்பவரது சொகுசு காரில் பயங்கர ஆயுதங்கள் இருந்தது தெரிய வந்தது. உடனடியாக காரை சோதனை செய்த போலீசார் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். காரில் ஆயுதங்களுடன் இருந்த தினேஷ், தேவராஜ், விக்டர், பாரதி செல்வம் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆயுதங்கள் இருந்த சொகுசு காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.