Skip to main content

சென்னையில் ஆர்.டி.பி.சி.ஆர். முடிவு அறிவிப்பதில் தாமதம்... மூன்று நாட்கள் வரை காத்திருக்கும் சோகம்

Published on 20/01/2022 | Edited on 20/01/2022

 

jlk


இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. தொற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்த அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் கரோனா தாக்கம் விஸ்வரூபம் எடுத்துவருகிறது. தமிழகத்தில் பதிவாகும் மொத்த பாதிப்பில் 3ல் ஒரு பங்கு சென்னையில் மட்டும் பதிவாகி வருகிறது. தற்போதுவரை தினசரி 8 ஆயிரம் என்ற அளவில் தொற்று உறுதி செய்யப்படுகிறது. 

 

இந்நிலையில், மற்ற நகரங்களைவிட சென்னையில் கரோனாவை உறுதிப்படுத்த எடுக்கப்படும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 24 மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மூன்று நாட்கள் ஆகியும் முடிவுகள் வரத் தாமதமாவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அரசு பணியில் இருப்பவர்கள் இதனால் பெரிய அளவில் நிர்வாகச் சிக்கல்களைச் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்கள். 

 

இதுதொடர்பாக சென்னையில் உள்ள அரசு மூத்த பெண் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, "கடந்த வாரம் உடல் வலி, லேசான ஜூரம், தொண்டை வலி காரணமாக அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்துகொண்டேன். 24 மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகள் வரும் என்று மருத்துவ ஊழியர்கள் தெரிவித்து என்னுடைய தொலைப்பேசி எண்ணை பெற்றுக்கொண்டார்கள். ஆனால் மூன்று நாட்களைக் கடந்தும் பரிசோதனை முடிவுகள் எனக்கு வரவில்லை. கரோனா கொடுக்கும் வலியைக் காட்டிலும் இந்த காலதாமதம் மேலும் மன உளைச்சலைக் கொடுக்கிறது. அலுவலகத்தில் நிறைய வேலைகள் இருக்கும் பட்சத்தில், கரோனா நெகடிவ் என்று காலம் கடந்து வந்தால் தங்களின் பணி பாதிப்பதோடு தேவையில்லாத விடுமுறையும் எடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்படுகிறது" என்றார். சென்னையில் பரிசோதனை எண்ணிக்கையில் அதிக அளவிலான பணியாளர்களை ஈடுபடுத்தி விரைவில் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சீனாவிலிருந்து தமிழகம் வந்த இருவருக்கு கொரோனா உறுதி

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

Two persons came Tamil Nadu from China have been positive corona virus

 

சீனாவில் இருந்து தமிழகம் வந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது 

 

சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சீனா, ஜப்பான், தைவான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கட்டாயமாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்படுகிறது. 

 

இந்நிலையில், சீனாவில் இருந்து தமிழகம் வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை ஏர் லங்கா விமானம் 70 பயணிகளுடன் மதுரை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளுக்கு பரிசோதனை செய்ததில் பிரதீபா என்ற பெண்ணுக்கும் அவரது 6 வயது மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

 

பிரதீபா தனது கணவர் மற்றும் மகளுடன் சீனாவில் இருந்துள்ளார். அவரது கணவர் வேலைநிமித்தமாக வேறொரு நாட்டிற்குச் சென்றதால், தனது மகளுடன் சீனாவில் இருந்து ஸ்ரீலங்கா வழியாக தமிழகத்திற்கு வந்துள்ளார். தற்போது அவருக்கும் அவரது மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளத்தில் உள்ள அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 

 

 

Next Story

ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து காத்திருப்போருக்கு மருந்து தொகுப்பு வழங்கப்படும் - மாநகராட்சி 

Published on 15/01/2022 | Edited on 15/01/2022

 

Drug package will be provided to those waiting for RT-PCR test - Corporation

 

தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகளவில் பரவிவருகிறது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து தொற்று பரவலின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதேபோல், பொதுமக்களுக்கு சளி, உடல் சோர்வு, காய்ச்சல் உள்ளிட்டவை இருந்தால் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம், ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து அதன் முடிவு வர தாமதமாவதால் மக்களும் அச்சத்துடனே இருந்துவருகின்றனர். 

 

இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதியில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு நாளை முதல் மருந்து தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ளும் நபர்களுக்கு மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளில் மருந்து தொகுப்பு தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

 

ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து காத்திருப்போருக்கு முடிவுகள் வரும்முன்பே மருந்து தொகுப்பு வழங்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த மருந்து தொகுப்பில் வைட்டமின் சி, ஜிங்க், பாராசிட்டமால் மாத்திரைகள், கபசுர குடிநீர், 3 அடுக்கு முகக்கவசம் உள்ளிட்டவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் தனிமைப்படுத்துதலில் இருப்போரின் உடல்நிலையை கருதி மருந்து தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.