Skip to main content

கடன் பிரச்சனையால் தந்தை தற்கொலை... தந்தையுடன் மகளும் இறந்த சோகம்!

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

Debt problem father and daughter passes away


விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுக்கா நாகாம்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (38). இவருக்கு மங்கையர்க்கரசி என்ற மனைவியும் ஆர்த்தீஸ்வரி என்ற 7 வயது மகளும் உள்ளனர். இந்த நிலையில், விவசாயியான ஐயப்பன், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, அதே ஊரில் டீக்கடை நடத்திவரும் ராஜசேகர் என்பவர் மூலம், திண்டிவனம் அருகில் உள்ள எடையன்குளம் என்ற ஊரைச் சேர்ந்த சம்பத் என்பவரிடம், வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு 25,000 ரூபாய்க் கடன் பெற்றுள்ளார்.

 

அதன்பிறகு, வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளார் ஐயப்பன். இதனால், கடன் தொகை 25,000-ஐ வட்டியுடன் சேர்த்து 50 ஆயிரமாக திருப்பித் தர வேண்டும், இல்லாவிட்டால் 2 லட்ச ரூபாய்க்கு உனது பத்திரத்தில் சொத்துகளை எழுதி கையெழுத்திட்டுத் தர வேண்டும். அதுவும் இல்லை என்றால், உனது சொத்துகளை ஜப்தி செய்துகொள்வோம் என்று கூறி ஐயப்பனை சம்பத் உள்ளிட்ட இருவரும் சேர்ந்து மிரட்டியுள்ளனர். 

 

இதனால், விரக்தியடைந்த ஐயப்பன், கடந்த 7ஆம் தேதி மாலை, 5 மணியளவில், தனது வீட்டில் குளிர்பானம் வாங்கி வந்து, அதில் விஷம் கலந்து குடித்துள்ளார். இதனால் மயக்கமுற்ற ஐயப்பன், வாந்தி எடுத்துள்ளார். அதேநேரம் அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஐயப்பனின் மகள் ஆர்த்தீஸ்வரி, விஷம் கலந்து இருப்பது தெரியாமல் அந்தக் குளிர்பானத்தை எடுத்துக் குடித்துள்ளார். 


இதனால் தந்தை, மகள் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு ஐயப்பன், ஆர்த்தீஸ்வரி இருவரும் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளனர். 

 

cnc


இருவரின் இறப்பிற்குக் காரணமானவர்கள் மீது, கந்து வட்டிக் கொடுமைப் பிரிவில் வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என்று கூறி, நேற்று காலை, ஐயப்பன் மனைவி மங்கையர்க்கரசி மற்றும் அவரது உறவினர்கள், இறந்துபோன இருவரது உடல்களையும் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த டி.எஸ்.பி ராஜேந்திரன், சப் இன்ஸ்பெக்டர் பரமசிவம் ஆகியோர் அங்குவந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

 

இந்த கந்துவட்டிக் கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஒருவரைக் கைது செய்துள்ளதாகவும் மற்றொருவரை விரைவில் கைது செய்வதற்குத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் அதிகாரிகள் சமாதானம் கூறினர். அதை ஏற்று இறந்துபோன இருவரது உடலையும் பெற்றுக்கொண்ட குடும்பத்தினர், நேற்று மாலை 7 மணிக்கு அடக்கம் செய்தனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.