Skip to main content

அகவிலைப்படி கட்... வீட்டில் இருப்பவர்களுக்கும், வேலை செய்பவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது முதல்வர் அவர்களே... கொந்தளிக்கும் காவல்துறை.!

Published on 28/04/2020 | Edited on 28/04/2020

 

DEARNESS ALLOWANCE STATE GOVERNMENT STAFFS POLICE


மத்திய அரசைப் பின்பற்றி அகவிலைப்படி உயர்வை, அடுத்த ஆண்டு ஜூலை வரை நிறுத்தி வைத்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல், விடுப்புகளை சரண்டர் செய்து அதைப் பணமாகப் பெறுவதையும் எடப்பாடி அரசு ரத்து செய்துள்ளது.

அரசின் இந்த நடவடிக்கைக்கு அரசாங்க ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக காவல்துறை, தீயணைப்புத் துறை, தூய்மைப் பணியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக காவல்துறையினர், அரசு தனது முடிவைப் பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

 

DEARNESS ALLOWANCE STATE GOVERNMENT STAFFS POLICE


இதுகுறித்து காவல்துறையில் பணியாற்றும் சிலர் நம்மிடம், "இந்த ஊரடங்கு காலத்தில் வெயிலையும், மழையையும் பொருட்படுத்தாமல் வேலை பார்த்து வருகிறோம். ரோட்ல சுத்துற ஒவ்வொருத்தரையும் கிளிப்பிள்ளைக்குச் சொல்ற மாதிரி கெஞ்சி கூத்தாடி, அய்யா வீட்டில இருங்கய்யான்னு சொல்லி நாங்க கரோனாவுக்கு எதிரான போரில் எங்களை ஈடுபடுத்தி இருக்கோம். இதனாலேயே எங்களில் பலருக்கு கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருக்கோம். எனக்கு இருக்கான்னு எனக்கே தெரியாது. டெஸ்ட் எடுத்து பார்த்தா தான் தெரியும். அந்த அளவுக்கு உயிரைப் பணயம் வைத்து வேலை பார்க்கிறோம். டாக்டருங்களும், தூய்மைப் பணியாளர்களும் கரோனாவுக்கு எதிரான போரில் முன்னாடி இருக்காங்க, அதனால அவங்களுக்கு ஒரு மாதம் சிறப்பு ஊதியமாக வழங்குவதாக முதல்வர் அறிவித்தது சந்தோசம் தான், ஏத்துக்குறோம். அதே போரில் பின்வரிசையில் நிற்கிறது நாங்கள், எங்களுக்குச் சிறப்பு ஊதியம் கொடுக்க வேண்டாம். ஏற்கனவே கொடுக்கிற ஊதியத்தையும் குறைச்சா என்னங்க நியாயம்.? இப்ப பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைக்கே போகலை, அவங்களுக்கு இந்த அரசாங்கம் சம்பளம் கொடுக்குது. வேலை செய்கிறவர்களையும், வீட்டில் இருப்பவர்களையும் ஒரே அளவுகோலில் வைத்துப் பார்ப்பது ஏற்க முடியாது. நிதிப் பற்றாக்குறையா இருக்குதுன்னா? உசிர கொடுத்து வேலை பார்க்கிற எங்க சம்பளத்தில தான் கை வைக்கனுமா?" என்கின்றனர்.
 

http://onelink.to/nknapp


லாக்டவுன் ஆரம்பித்ததில் இருந்து சரியா சாப்பிடாமல், சாப்பிட கடைகளும் இல்லாமல் காவல்துறை, தீயணைப்புத் துறை, தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறோம். எனவே இந்த 3 துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைக்கக் கூடாது. அப்படிச் செய்வது அரசுக்கு நல்லதல்ல.!
 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.