Skip to main content

உயிரோடு வந்த ‘இறந்த’ முதியவர்! - அதிரவைக்கும் அதிகாரிகளின் அலட்சியம்!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

The ‘dead’ old man who came alive! - The negligence of the shaking authorities!

 

“நீங்க செத்துட்டீங்க.. கவர்மெண்ட் ரெக்கார்ட் சொல்லுது.. உங்களோட குடும்ப அட்டையை முடக்கிட்டோம். முதலமைச்சர் நிதியோ, மளிகைப் பொருளோ உங்களுக்கு கிடையாது..” சிவகாசி, ஆலங்குளம் பகுதி கரிசல்குளம் ரேஷன் கடைக்கு குடும்ப அட்டையை எடுத்துவந்த முதியவர் காளிமுத்துவிடம் அங்கிருந்த பெண் ஊழியர் கூலாகச் சொன்னார். (அந்த முதியவரை பெண் ஊழியர் ஒருமையிலேயே பேசியுள்ளார்).

 

“அம்மா.. நான் சாகல.. உங்க கண்ணுக்கு முன்னால உசிரோடதானே நிக்கிறேன்..” என பரிதவித்தார் காளிமுத்து. 

 

“உங்க நியாயத்தை தாலுகா ஆபீஸுக்குப் போயி பேசுங்க..” என விரட்டினார் அந்த ஊழியர்.

 

தாலுகா அலுவலகம் சென்ற காளிமுத்துவிடம் வி.ஏ.ஓ.-வை பார்க்கச் சொன்னார்கள். வி.ஏ.ஓ.வோ “என்கிட்ட எதுக்கு வர்றீங்க? தாலுகா ஆபீஸுக்குப் போங்க..” என்று எரிந்து விழுந்தார். நான்கு வாரங்கள் அலைக்கடித்துவிட்டு, “விருதுநகர் கலெக்டர் ஆபீஸுக்குப் போங்க..” என்று தாலுகா அலுவலகம் காளிமுத்துவிடம் கூற, மாவட்ட ஆட்சியர் அலுவலகமோ சென்னையைக் கை காட்டியிருக்கிறது.

 

அதிகாரிகளின் அலட்சிய நடவடிக்கைகளால் நொந்துபோன காளிமுத்து, “வீட்டுக்காரம்மா இல்ல. எனக்கு வேற வழியில்ல. 100 ரூபாய்க்கு வாட்ச்மேன் வேலை பார்த்து ஏதோ வயித்த கழுவுனேன். நாலு வாரமா அதிகாரிகள பார்க்க அலைஞ்சதுல அந்த வேலையும் போச்சு. உசிரோட இருக்கும்போதே செத்துட்டேன்னு ரெக்கார்ட் பண்ணிட்டாங்க. இனி, பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான்.” என்றார் விரக்தியுடன். 

 

The ‘dead’ old man who came alive! - The negligence of the shaking authorities!

 

தனது புகாரை, வெம்பக்கோட்டை வட்ட வழங்கல் அலுவலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பி, தன்னுடைய ஸ்மார்ட் கார்டை பயன்பாட்டுக்கு கொண்டுவர காளிமுத்து கோரிக்கை விடுத்துள்ள நிலையில், வெம்பக்கோட்டை தலைமை வட்ட வழங்கல் அலுவலர் சிவானந்தத்திடம் பேசினோம் “நான் இங்கே ஜாய்ன் பண்ணி ரெண்டு மாசம்தான் ஆகுது. அதுக்கு முன்னால ஏதோ பெயர் மாறிருச்சு போல. இப்பக்கூட வாங்கய்யா.. வந்து ஆன்லைன்ல அப்ளை பண்ணுங்க. ஸ்மார்ட் கார்டு வாங்கித் தர்றோம்னு சொன்னேன். ஏன்னு தெரியல. அவரு வரமாட்டேங்கிறார்.” என்றார். 

 

காளிமுத்துவோ “இத்தனை நாளு என்னை அலையவிட்டுட்டு, இப்ப பத்திரிகைகாரங்க கேள்வி கேட்டதும், கார்டு தர்றேன்னு சொல்லுறாங்களா? அவங்க ஆபீஸுக்கு நான் அலைஞ்சது போதும். கார்டை எங்கே வாங்கணுமோ, அங்கே வாங்கிக்கிறேன். என்னை மாதிரி இன்னும் எத்தனை பேர சாகடிச்சிருக்காங்களோ?” என்று புலம்பினார். 

 

காளிமுத்து போன்றவர்களை செத்துச் செத்துப் பிழைக்க வைக்கிறது அதிகாரிகளின் அலட்சியம்!

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

வைரலான சி.சி.டி.வி.! ஓட்டல் ஓனரைக் கத்தியால் குத்திய சகோதரர்கள் கைது!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Sivakasi viral cctv police arrested two

‘பார்சல் வழங்குவதற்குத் தாமதமானதால் ஓட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து’ என சிவகாசி – மாரனேரியில் நடந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து மாரனேரி காவல்நிலையம், ஏ.துலுக்கபட்டியைச் சேர்ந்த முனியாண்டியின் மகன்கள் மாரீஸ்வரன் மற்றும் பாண்டீஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்தது.

ஜெகநாதன் என்பவர் ஆலங்குளம் சாலையில் ஜே.ஜே. ஓட்டல் நடத்துகிறார். அவருடைய ஓட்டல் தொழிலுக்கு உதவியாக மகன்கள் கரிமால், ராஜேஸ் கண்ணன், வாசுதேவன் ஆகியோர் இருந்து வருகின்றனர். இரவு 8 மணியளவில், மாரீஸ்வரனும் பாண்டீஸ்வரனும் அந்த ஓட்டலுக்கு பார்சல் சாப்பாடு வாங்கச் சென்றனர். அப்போது ராஜேஸ் கண்ணன் ஓட்டலுக்குள் செல்லும்போது தெரியாமல் இடித்துவிடுகிறார். உடனே இருவரும்  “பார்த்துப் போகவேண்டியதுதானே..” என்று ராஜேஸ் கண்ணனைக் கெட்ட வார்த்தையால் திட்டுகின்றனர். கரிமாலும் ஓட்டலில் இருந்தவர்களும் இருவரையும் சத்தம்போட,  “உங்களை வந்து வச்சிக்கிறோம்.” என்று சென்றுவிட்டனர்.

அடுத்த 15 நிமிடங்களில் மாரீஸ்வரனும் பாண்டீஸ்வரனும் மீண்டும் ஓட்டலுக்கு வந்து வாசுதேவனைக் கத்தியால் குத்தினார்கள். அப்போது கரிமாலும் வாசுதேவனும் பிடிக்க முயன்றபோது, வாசுதேவனுக்கு கையில் காயமேற்பட்டது. கரிமாலும் ஓட்டலில் இருந்த மற்றவர்களும் கத்தி வைத்திருந்த சகோதரர்களுடன் மல்லுக்கட்டியபோது “எங்கள பகைச்சுக்கிட்டா கத்தியால குத்தி கொன்றுவிடுவோம்..” என்று மிரட்டிவிட்டு தப்பிச் சென்றனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் கரிமால் அளித்த புகாரின் பேரில், மாரனேரி காவல்நிலையம் வழக்கு பதிவுசெய்து இருவரையும் தேடிவந்தது. தற்போது மாரீஸ்வரனும் பாண்டீஸ்வரனும் கைதாகியுள்ளனர்.