Skip to main content

''எம் மகன் மாதிரிப்பா நீ...''- மின் கோபுரத்தில் ஏறிய இளைஞரை நைசாக பேசி தரையிறக்கிய தாசில்தார்..!!!

Published on 11/04/2020 | Edited on 11/04/2020

"ஊரெல்லாம் பிரச்சனையாக இருக்கு.. அது தெரியாமல் இங்க வந்து உட்காந்துருக்கே.. உன்னிடம் யார் என்ன பிரச்சனை செய்தாலும் சொல்லு..! அம்மா நான் இருக்கேன்ல.. தீர்த்து வைக்கின்றேன்பா." என நைச்சியமாக பேசி, தற்கொலைக்காக மின் கோபுரத்தில் மூன்றரை மணி நேரமாக ஏறி அமர்ந்திருந்த இளைஞரை தரையிறக்கியுள்ளார் தாசில்தார் ஒருவர்.


 

 

Dasildar, the son of a young man who climbed the tower


நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அகதிகள் முகாமில் வசிக்கும் ஜீவா, சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகிலுள்ள திருப்பதி நகரில், முத்துலெட்சுமி என்பவருடன் வசித்து வருகின்றார். முத்துலெட்சுமிக்கு முன்னரே திருமணமாகி குழந்தைகள் இருந்த நிலையில், அவரை மறுமணம் செய்து வாழும் ஜீவா கூலி வேலைக்கு சென்று குடும்பத்தினை நடத்தி வந்துள்ளார். கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்த நிலையில், நேற்று அதிகாலையிலேயே சிவகங்கைக்கு, வேலைக்கு செல்வதாகக்கூறி சென்றவர் மாலையில் குடிபோதையுடன் வீடு திரும்பியிருக்கின்றார். இதனால் கணவன், மனைவிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், பக்கத்து வீட்டிலிருந்தவர்கள் இதனைக் கண்டித்திருக்கின்றார்கள். இதனால் கோபமடைந்த ஜீவா அருகிலுள்ள மின்கோபுரத்தில் ஏறி உச்சிக்கே சென்றவர், "பக்கத்து வீட்டுக்காரரை கைது செய்யாவிடில் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டலை" தொடர்ந்திருக்கின்றார்.
 

nakkheeran app



உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மதகுப்பட்டி எஸ்.ஐ. ரஞ்சித் உள்ளிட்ட போலீசார், சிவகங்கை தீயணைப்பு துறையினர் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்திருக்கின்றனர். உடனடியாக பலனளிக்காத நிலையில், தாசில்தார் மைலாவதியோ, "ஏம்பா..! நான் உன்னுடைய அம்மா மாதிரி.. நீயும் எம்புள்ளை மாதிரி தான் இருக்கிற.. உன்னைய தொந்தரவு செய்தவர்களை கூறு, உடனடியாக அம்மா ஆக்ஷன் எடுக்கின்றேன்." என நைச்சியமாக பேச்சு வார்த்தையை துவங்கியுள்ளார். ஜீவாவும் கீழே இறங்க ஏறக்குறைய மூன்றரை மணி நேரம் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

ஜீவாவை மீட்ட தீயணைப்புத்துறையினர் 108 வாகனம் மூலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மின் இணைப்பு துண்டிப்புக் காரணமாக திருக்கோஷ்டியூர், கண்ட்ரமாணிக்கம்,  நாட்டரசன்கோட்டை மற்றும் காளையார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மூன்றரை மணி நேரம் மின்தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த ஜீவாவிற்கு ஊரடங்கு நிலையில் மது கிடைத்தது எப்படி.? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொ.ம.தே.க. வேட்பாளர் அறிவிப்பு! 

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
kmdk Party Candidate Announcement

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் கே. சுப்பராயன் மீண்டும் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜும் போட்டியிட உள்ளனர். இந்நிலையில், திமுக கூட்டணியில் நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். சூரியமூர்த்தி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளார். இவர் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் இளைஞரணி செயலாளராகவும் உள்ளார். 

Next Story

'இது என்ன நான்சென்ஸ் செயல்' - அதிகாரிகளை அலறவிட்ட மாவட்ட ஆட்சியர்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
nn

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அங்கிருந்த காத்திருப்போர் அறையில் நோயாளிகளின் பயன்படுத்திய பழைய படுக்கைகள், கட்டில்கள் அடுக்கி இருப்பதைக் கண்டு அதிருப்தி அடைந்து அதிகாரிகளை கண்டித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நாமக்கல் அரசு மருத்துவமனையில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டார். பூஜையில் கலந்துகொண்ட கையோடு மருத்துவமனை வளாகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் உறவினர்கள் காத்திருப்பதற்காக கட்டப்பட்ட காத்திருப்போர் அறை பூட்டப்பட்டிருந்தது. அதேபோல் அவர்களுக்கான கழிவறைகளும் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆட்சியர் உமா, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பியதோடு கண்டித்தார்.

'உங்களால் இதையெல்லாம் மெயின்டைன் பண்ண முடியாது என்றால் சொல்லி விடுங்கள். நான் மகளிர் சுய உதவி குழுவை வைத்து கட்டண கழிப்பிடமாக இதை நான் மாற்றி விடுகிறேன்' என கேட்டார். அதற்கு மருத்துவர்கள் இன்னும் டெண்டர் விடவில்லை என தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர், டெண்டர் விடும்வரை நோயாளிகளின் உறவினர்கள் கழிவறைக்கு செல்லாமல் இருக்க முடியுமா? டெண்டர் விட்டால் தான் தலைவலியே. தேர்தல் வேலையை பார்ப்பதா டெண்டர் விடுவதா? என்று அதிருப்தி தெரிவித்தார்.

மீண்டும் இரவு செக் பண்ணுவதற்காக வருவேன் எல்லாவற்றையும் சரியாக வைத்திருக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளிடம் அதிரடியாக தெரிவித்துவிட்டு பிணவறை அருகே உள்ள காத்திருப்போர் அறைக்கு ஆட்சியர் சென்றார். ஆனால் அந்த கட்டிடம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியானார். உறவினர்கள் என்னதான் சொன்னாலும் அந்த காத்திருப்போர் அறையில் இருக்காமல் வெளியே இருக்கின்றனர் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. காத்திருப்போர் அறையில் இப்படி கட்டில்களை எல்லாம் போட்டு அடைத்து வைத்திருந்தால் எப்படி? தேவைக்கு அதிகமாக கட்டிலை வாங்கிவிட்டு பின்னர் காத்திருப்போர் அறையில் போட்டுவைப்பது என்ன நான்சென்ஸ் செயல் என கேள்வி எழுப்பி விட்டு சென்றார்.