Skip to main content

சைபர் க்ரைம்; விவசாயியின் ஒரு லட்சத்தை மீட்ட காவல்துறை! 

Published on 12/05/2022 | Edited on 12/05/2022

 

Cyber ​​crime; Police rescue farmer's one lakh

 

விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள கொடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயாத்துரை மகன் பாலசுப்ரமணியன். இவருடைய செல்போனுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் அவருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த இடத்தில் செல்போன் டவர் அமைக்க சம்மதம் தெரிவித்தால் அதற்கு அட்வான்ஸ் தொகையாக 20 லட்சமும் மாத வாடகை 25,000 ரூபாயும் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். 


அதை நம்பிய பாலசுப்பிரமணியன், அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு 1,14,999 ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பிறகும் அவர்கள் பாலசுப்பிரமணியனிடம் மேலும் மேலும் பணம் கேட்டுள்ளனர். அப்போது அவர், ‘என்னிடம் அந்த அளவுக்கு பணம் இல்லை. எனவே என்னிடத்தில் தங்கள் செல்போன் டவர் அமைக்க வேண்டாம். நான் செலுத்திய பணத்தை திருப்பித் தாருங்கள்’ என்று கேட்டுள்ளார். 


அதன் பிறகு அவர்கள் எந்த தகவலும் தராமல் பாலசுப்பிரமணியன் போனைத் துண்டித்துள்ளனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலசுப்பிரமணியன் அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்தார். உடனடியாக அவர், விழுப்புரத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த கூடுதல் எஸ்.பி கோவிந்தராஜன் மற்றும் போலீசார் இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்து வங்கி அதிகாரிகளின் துணையோடு உடனடியாக அந்த வங்கிக் கணக்கு முடக்கம் செய்தனர். அதன் பிறகு வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்போடு பாலசுப்பிரமணியம் செலுத்திய 1,14,999 பணத்தை மீட்டு அவரது கணக்கில் வரவு வைப்பதற்கு ஏற்பாடு செய்தனர். உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுத்த சைபர் கிரைம் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா பாராட்டியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.