Skip to main content

இப்போதைக்கு டாஸ்மாக் கடைகளைத் திறக்க முடியாது! அமைச்சர் திட்டவட்டம்!!

Published on 16/04/2020 | Edited on 16/04/2020


வருகிற மே 3- ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போதைக்கு டாஸ்மாக் கடைகளைத் திறக்க வாய்ப்பு இல்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் நோய்த்தொற்று அபாயம் இருப்பதால் தனித்திருத்தல் மற்றும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் கூட்டம் கூடும் இடங்களான திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவை மட்டுமின்றி தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டன. 
 

curfew tasmac shops minister thangamani speech


இந்நிலையில், மதுவுக்கு அடிமையானவர்கள் மாற்று போதையைத் தேடி வார்னிஷ், சானிடைஸர் லோஷன் ஆகியவற்றைக் குடித்து உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. மற்றொருபுறம் கள்ளச்சாராய விற்பனையும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறப்பு குறித்து அமைச்சர் தங்கமணி நாமக்கல்லில் புதன்கிழமை (ஏப். 15) கூறியதாவது:

ஊரடங்கு உத்தரவால் மின் கட்டணம் செலுத்துவதில் சில சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளன. மின் கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். கட்டணம் செலுத்தாவிட்டாலும், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட மாட்டாது. மின்வாரிய ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர்.
 

http://onelink.to/nknapp


நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 45 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இம்மாவட்டத்தில் வசிக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ எண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. 

ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. மக்களின் நலன்தான் அரசுக்கு முக்கியம். இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.