Skip to main content

மணமக்களின் பண்பாடு மாறாத 'மாட்டு வண்டி' பயணம்...!!

Published on 06/03/2020 | Edited on 06/03/2020

திருமண முறைகள் என்றாலே அது ஆடம்பரமானதாக மாறிவிட்டது. இக்காலத்தில் சாதாரண நடுத்தரக் குடும்பத்து திருமணங்கள் கூட வசதியான திருமண மண்டபங்களில் பல லட்சங்கள் செலவு செய்து ஆரவாரமாக நடத்தப்படுகிறது. எளிமையான திருமணங்கள் இப்போதெல்லாம் மிகவும் அபூர்வமாகத்தான் நடக்கிறது. அப்படி ஒரு திருமணம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடந்தது. அதுவும் தமிழ் பண்பாட்டு முறையில் நடத்தி அசத்தியிருக்கின்றனர்.
 

The culture of the  couple is the unchanging 'cow-cart' journey

 

கோபிசெட்டிபாளையத்தில் சேர்ந்த மணமகன் பரணி பிரகாஷ், மணமகள் சுபாஷினி. இருவருமே முதுகலைப்பட்டம் பெற்று நகர்புறத்தில் நல்ல வேலையில் உள்ளவர்கள். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட இவர்களது திருமணம் ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. புதுமண தம்பதியினர் இருவரும் கருங்கரடு முருகன் கோயிலிலிருந்து திருமணம் நடைபெறும் மண்டபத்திற்கு புறப்பட்டனர். அப்போதுதான் பலருக்கு வியப்பாக இருந்தது. இவர்கள் பயணம் செய்யும் வண்டி அது ஒன்றும் சொகுசு கார் அல்ல மாட்டு வண்டி.,அந்த மாட்டு வண்டியில் புதுமண ஜோடிகள் ஏறிக்கொள்ள சில உறவினர்களும் அந்த வண்டியில் பயணம் செய்யத் தொடங்கினார்கள்.

கோயிலில் இருந்து திருமண மண்டபம் சரியாக பத்து கிலோமீட்டர், முழுக்க கிராமப்புற பாதை அந்த மாட்டு வண்டியில் திருமண ஜோடிகள் வருவதைக் கண்ட கிராம மக்கள் ஆச்சரியமாகவும், அதேசமயம் உற்சாகமாகவும் அவர்களை வழி அனுப்பினார்கள். இளைஞர்கள் சிலர் மாட்டு வண்டியை நிறுத்தி வண்டியோடு செல்பி எடுத்துக்கொண்டனர். கிராமப்புற பெண்கள் பலர் மணமக்களை வாழ்த்தி அனுப்பினார்கள்.

 

The culture of the  couple is the unchanging 'cow-cart' journey

 

இதுபற்றி மணமக்கள் கூறும்போது "நாங்கள் இருவரும் விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள் அல்ல, ஆனாலும் இன்றைய நாகரீக உலகம் நமது தமிழ் பண்பாட்டை புறந்தள்ளிவிட்டு புதிய புதிய நடைமுறைகளை உருவாக்கி வருகிறது. அந்த காலத்தில் மணமக்கள் மாட்டு வண்டியில் பயணம் செய்து திருமணம் செய்வது வழக்கமாக இருந்தது. அதை நினைவுபடுத்தும் விதமாகவும் நமது பண்பாட்டின் சிறப்புகளை வரும் தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் விதமாகவும் நாங்கள் இந்த திருமணத்தை நடத்துகிறோம். பொதுவாக இதன் மூலம் எங்களின் திருமணம் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளது. இது எங்களுக்கு சிறப்பாக உள்ளது" என்றனர்.

''மாட்டுவண்டி பூட்டிகிட்டு மணமக்களை கூட்டிகிட்டு சலங்க வண்டி போகுதடி அம்மாடி...'' என சிலர் பாட்டுப் பாடியதும் அமர்க்களமாக இருந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பறக்கும் முத்தத்தால் பந்தாடிய மனைவி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
The husband who flew because of the flying kiss

நாகையில், மனைவிக்கு பறக்கும் முத்தம் (flying kiss) கொடுத்த கணவரை மனைவியே அடியாட்களை வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நாகை தேவூர் பகுதியைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் செந்தமிழ் செல்வன். அவருடைய மனைவி சுதா. அவரும் சித்த மருத்துவராக உள்ளார். செந்தமிழ் செல்வன் - சுதா இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது. இருவரும் முறையாக விவாகரத்து பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி தன்னுடைய 13 வயது மகனைப் பார்ப்பதற்காக செந்தமிழ் செல்வன் சென்றுள்ளார். ஆனால் அவரது மனைவியான சுதா மகனை சந்திப்பதற்குத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி சுதா பணியாற்றும் மருத்துவமனைக்கு வரும் செந்தமிழ் செல்வன், பறக்கும் முத்தம் (flying kiss) கொடுப்பதைப் போல் செய்வதால், தொல்லை தாங்க முடியாத சுதா அடியாட்களை வைத்து செந்தமிழ் செல்வனை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த செந்தமிழ் செல்வன் மருத்துவமனையில் தலையில் கட்டுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

Next Story

மாறி வரும் உணவு முறையும் வாழ்க்கைச் சூழலும் - இளையோருக்கு வழிகாட்டும் ‘ராசி பலன்’ விஷால் சுந்தர்  

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 Vishal Sundar Interview

 

இன்றைய தலைமுறையினருக்கான பல்வேறு கருத்துக்களை 90ஸ் கிட்ஸின் ஆதர்சமான தொகுப்பாளர் விஷால் சுந்தர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அந்தக் காலத்தில் குறைவான அளவிலேயே செய்திகள் நமக்குக் கிடைத்தன. இப்போது செய்திகள் நமக்கு எளிதாகக் கிடைக்கின்றன. நிறைய தகவல்கள் நம்மை வந்து அடைந்துகொண்டே இருப்பதால் நம்முடைய மூளையின் வேலை கடினமாகிறது. டெக்னாலஜி வளர்ந்தாலும் நம் மூளையின் செயல் திறன் அதே அளவில் தான் இருக்கிறது. டெக்னாலஜியிடம் முழுமையாக சரணடைந்து விடாமல் இருக்க வேண்டும். 90ஸ் கிட்ஸ் ஜாலியாக இருப்பதையே மறந்துவிட்டனர். வாழ்க்கையில் தாங்கள் எதையோ இழந்துவிட்டது போலவே எப்போதும் இருக்கின்றனர். 

 

2கே கிட்ஸ் வீட்டில் ரூமை விட்டு வெளியே வருவதே இல்லை. எங்களுடைய இளமைக் காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து வெயிலில் விளையாடுவோம். செல்போனை கொஞ்சம் ஓரமாக வைக்க வேண்டும். ஆனால் தேவையான அளவு டெக்னாலஜியை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். அது எந்த அளவு என்பதை குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தர வேண்டும். இன்று எல்லோருக்குமே ஏதோ ஒரு வகையில் மன அழுத்தம் இருக்கிறது. காதலை வெளிப்படுத்துவதும் காலத்துக்கு ஏற்றவாறு மாறி வருகிறது. எங்களுடைய காலத்தில் லெட்டர் மூலம் காதல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு பேஜர், கம்ப்யூட்டர், மொபைல் போன் என்று மாறி வருகிறது.

 

ஒரு காலத்தில் வாழ்வாதாரத்திற்காக வேலை செய்யும் நிலைமை இருந்தது. இப்போது அடிப்படை வசதிகள் அனைவருக்கும் இருப்பதால், வேலைக்குச் சென்றால் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். தினமும் ஒரே வேலையைச் செய்வதை இன்றைய இளைஞர்கள் விரும்புவதில்லை. அது அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இன்று தேவைகள் அதிகமாகிவிட்டதால் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். 

 

இன்றைய இளைஞர்களுக்கு தொடர்ந்து 8 மணி நேரம் வேலை செய்வது கூட கடினமாக இருக்கிறது. நண்பர்களை நேரில் சந்தித்து விளையாடுவது இன்று மிகவும் குறைந்துவிட்டது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு கம்பெனி மாறினால் சம்பளம் வேகமாக உயரும் வாய்ப்பு இருக்கிறது. ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யும்போது மன அழுத்தம் ஏற்பட அதிகம் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு தாயையும் இதற்கான உதாரணமாகச் சொல்லலாம். சமீபத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன் என்கிற படம் இதுகுறித்து பேசியது. அதுபோல் இன்றைய இளைஞர்களும் செல்போனைத் தாண்டி வெளியுலகைப் பார்க்கிறார்களா இல்லையா என்கிற சந்தேகம் எழுகிறது. தங்களை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளாமல் அவர்கள் வெளியே வர வேண்டும்.

 

இன்று குழந்தைகளை காலை நேர வெயிலில் கூட வெளியே அனுப்ப முடிவதில்லை. உலகத்தில் வெப்பம் இப்போது அதிகமாகியுள்ளது. க்ரீன் கேஸ் அதிகமாகும்போது வெப்பமும் அதிகமாகிறது. தொடர்ந்து மழையே வராமல் இருப்பது, மழை பெய்தால் மிக அதிகமான அளவில் பெய்வது இப்போது அதிகமாக நடக்கிறது. அமெரிக்காவில் மாட்டுக்கறி சேர்த்து தான் சீஸ் பர்கர் செய்யப்படுகிறது. அதற்காகவே வளர்க்கப்படும் மாடுகளிலிருந்து வெளிவரும் மீத்தேன் கேஸ் உலகிற்கே ஆபத்தானது. 

 

சீஸ் பர்கரால் உலகமே அழியக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. காலநிலை மாற்றங்களுக்கு இதுபோன்ற எதிர்பாராத பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சிமெண்ட் தயாரிப்பதாலும் பல்வேறு பாதிப்புகள் இருக்கின்றன. சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிப்புகளை மேற்கொள்ள அனைத்து துறைகளிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. பெட்ரோல், டீசல் வாகனங்களை விட எலக்ட்ரிக் வாகனங்கள் பல மடங்கு மேலானது. 

 

தேவையில்லாத பொருட்களை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் அப்புறப்படுத்தும் முறை இந்தியாவில் இன்னும் பின்பற்றப்படவில்லை. கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் அனைத்து உலக நாடுகளுமே ஈடுபட்டுள்ளன. ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வளர்க்கும்போது அதனால் வெளியேறும் அதிக அளவிலான வாயுக்கள் உலகுக்கு ஆபத்தாக இருக்கின்றன. வாழை மட்டையில் செய்த பைகளைப் பயன்படுத்துவது, வாழை நாரில் உருவாக்கப்பட்ட புடவைகளை உடுத்துவது, டிஸ்யூ பேப்பர் பயன்படுத்துவதைக் குறைப்பது உள்ளிட்ட நம்மால் முடிந்த பங்களிப்பை நாம் வழங்கினால் காலநிலை மாற்றத்தை நம்மால் சரி செய்ய முடியும்.