Skip to main content

சமத்துவபுரம் வீடுகள் இடிந்து விழுவதால் குடியிருப்பு வாசிகள் அச்சத்துடன் வாழும் அவலம்!

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள ரூபநாராயணநல்லூர் ஊராட்சியில் கடந்த 2001- ஆம் ஆண்டு  வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து சமூக மக்களும் ஒரே இடத்தில் வாழ்வதற்காக பெரியார் நினைவு சமத்துவபுரம் என்ற பெயரில் 100 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கான கான்கிரீட் வீடுகள் தமிழக அரசால் கட்டப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். அக்கிராமத்தில் வசிக்கும் அனைவரும் தினக்கூலிகளாக மங்கலம்பேட்டை, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கு சென்று வேலைக்கு செய்து வருகின்றனர். 

cuddalore district viruthachalam Residential residents live in fear as houses collapse in Samathapuram

 

18 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகள் மறு சீரமைப்பு செய்யப்படாததால் பெரும் பகுதி சேதமடைந்துள்ளன. மோசமான நிலையில் உள்ள மேற்கூரைகள், சுற்றுச்சுவர்கள் அவ்வப்போது இடிந்து விழுந்து கொண்டிருப்பதாக அங்கு வசிக்கும் மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
 

cuddalore district viruthachalam Residential residents live in fear as houses collapse in Samathapuram


இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் தனது குடும்பத்துடன் சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருக்கும் போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததை பார்த்து தனது குழந்தைகளை தூக்கி கொண்டு வெளியே ஒடியதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இதேபோல் அடிக்கடி விபத்து நிகழ்வதாக அங்கு வசிக்கும் மக்கள் அச்சப்படுகின்றனர்.  
 

cuddalore district viruthachalam Residential residents live in fear as houses collapse in Samathapuram


 

மேலும் மழை பொழியும் போது மேற்கூரை வழியாக தண்ணீர் வீட்டிற்குள் வருவதால் பாத்திரங்களை வைத்து மழை தண்ணீரை பிடிக்கும் அவல நிலைக்கு அக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுபோல் சமத்துவபுரம் வீடுகளில் ஆணி கூட அடிக்க முடியவில்லை என்றும், அவ்வாறு ஆணி அடிக்க முற்பட்டால் சுவர்களில் விரிசல் எற்படுவதாகவும் கூறுகின்றனர். சமையல் செய்யும் போதும், இரவு நேரங்களில் தூங்கும் போதும் உயிருக்கு எவ்வித உத்திரவாதம் இல்லாமல் இருப்பதாகவும், தினந்தோறும்  அச்சத்துடன் வாழ்வதாகவும் கூறும் அப்பகுதி மக்கள் தமிழக அரசு தங்கள் வீடுகளை புணரமைத்து தரமான, வலுவான வீடுகளை கட்டித்தர வேண்டும் கோரிக்கை விடுக்கின்றனர்.



 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

26 மணி நேரம் விமான பயணம்; கடல் கடந்து வந்து ஜனநாயகக் கடமையாற்றிய மருத்துவர்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
doctor who came to Cuddalore from New Zealand and voted

கடலூர் செம்மண்டலத்தை சேர்ந்தவர் வினோத்( 46).  மருத்துவர். இவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசித்து வருகிறார். அங்கு அவர் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.  இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதும், அவர் தனது ஒற்றை வாக்கை செலுத்த சொந்த ஊருக்கு வந்து வாக்களிக்க விரும்பினார்.

இதையடுத்து அவர் நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து செல்ல சுமார் ரூ.1.70 லட்சம் செலவு செய்து டிக்கெட் வாங்கினார். பின்னர் அவர் ஓட்டு போட விமானத்தில் 26 மணி நேரம் பயணம் செய்து சொந்த ஊருக்கு( கடலூர்,செம்மண்டலத்துக்கு) 18 ஆம் தேதி இரவு வந்தார்.  நேற்று மதியம் 12 மணிக்கு கடலூர் செம்மண்டலத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று தனது வாக்கைப் பதிவு செய்தார்.

பின்னர் இதுகுறித்து மருத்துவர் வினோத் கூறுகையில், வெளிநாட்டில், தமிழ்நாட்டை சேர்ந்த பலர் வேலை பார்த்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு காரணங்களுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையாற்ற முடியாமல் சிரமப்படுகின்றனர். அதனால் வெளிநாட்டில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தபால் வாக்கு அளிக்க அரசு ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.