Skip to main content

பண்ருட்டி அருகே  வீடுகள் மீது கல்வீசி  தாக்குதல்! இருதரப்பிலும்  25 பேர் மீது வழக்கு! 

Published on 05/05/2019 | Edited on 05/05/2019

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த குச்சிப்பாளையம்  பகுதியில் நேற்று முன்தினம் காலை சிறுவர்கள் கைபந்து  விளையாடிக்கொண்டிருந்த போது மேல்கவரப்பட்டு காலனியை சேர்ந்த  நான்கு பேர் வந்து இங்கு ஏன் விளையாடுகிறீர்கள்  என கேட்டு தகராறு செய்துள்ளனர். அதனால் இருதரப்பு இளைஞர்களிடையேயும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து மேல்கவரப்பட்டு காலனியில்  இருந்து ஆதரவாளர்களை வரவழைத்து குச்சிப்பாளையம் வீடுகள் மீது கல்வீசி  தாக்குதல் நடத்தினர். இரு சக்கர வாகனங்களை உடைத்துள்ளனர். இதில் இருதரப்பிலும் 8 பேர் காயமடைந்தனர்.

 

p

 

இதனால் இரு தரப்பினரிடையே  மோதல்  ஏற்படும் சூழல் நிலவுவதால்  அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது.

 

p

 

இந்நிலையில் இந்த மோதல்  சம்பவம் குறித்து பண்ருட்டி காவல் நிலையத்தில்  குச்சிப் பாளையத்தை  சேர்ந்த முருகன் மருமகன்  தயாளன்(30) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மேல்கவரப்பட்டை சேர்ந்த திவான், திவாகர், தர்மராஜ், சீதாராமன், தவசி, லெனின், சண்முகபாண்டி, தனசீலன் உள்ளிட்ட 15 பேர் மீது கொலைமுயற்சி, பொதுசொத்து சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிந்து தர்மராஜ் என்பவரை  கைது செய்தனர். இதேபோல் மேல்கவரப்பட்டு தர்மராஜ் கொடுத்த மற்றொரு புகாரின் பேரில் குச்சிப்பாளையத்தை சேர்ந்த ரகுபதி, பன்னீர், சந்தோஷ், வடிவேல், அன்பு, தங்கராசு, எழுமலை, ஜெகன், சங்கர் சித்திரைசாவடி சேர்ந்த தயாளன்  ஆகிய 10 பேர் மீது கொலைமிரட்டல், வன்கொடுமை, எஸ்.சி.எஸ்.டி.சட்டத்தின்கீழ்  வழக்குபதிந்து தயாளன்(30) கைது செய்தனர்.

 

மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளதுடன் தலைமறைவாகியுள்ளவர்களை தேடி வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்திற்கு பணம் கொடுக்காதவர் கழுத்தறுத்து கொலை... புதுமாப்பிள்ளை கைது!

Published on 25/08/2022 | Edited on 25/08/2022

 

The man who did not pay for the wedding was strangled to ... Groom arrested!


பண்ருட்டி அருகே திருமண செலவுக்கு பணம் கொடுக்காத ரேஷன் கடை ஊழியரை புது மாப்பிள்ளை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளது மாளிகைமேடு என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் திலீப்குமார். இவர் வல்லத்தில் உள்ள ரேஷன் கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். வீட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை வெளியே சென்ற திலீப் குமார் வீடு திரும்பவில்லை. இதனால் பல இடங்களில் அவரது குடும்பத்தினர் தேடி உள்ளனர். ஆனால் பல மணி நேரத் தேடுதலுக்குப் பின்பு வீட்டிற்கு அருகிலேயே உள்ள கரும்புத் தோட்டம் ஒன்றில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக திலீப்குமார் கிடந்தார்.

 

மேலும் அவர் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலி மற்றும் செல்போன் ஆகியவை காணாமல் போயிருந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக பண்ருட்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். செய்யப்பட்ட விசாரணை அடிப்படையில் அரவிந்த் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அரவிந்த் என்ற இளைஞனுக்கு அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் திருமண செலவுக்காக திலீப் குமாரிடம் பண உதவி கேட்டுள்ளார். ஆனால் திலீப் குமார் பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அரவிந்த் திலீப் குமாரை கொலை செய்து அவரிடம் இருந்த நகைகள், செல்போன்களை பறித்தது விசாரணையில் தெரியவந்தது.


 

Next Story

பண்ருட்டி அருகே முந்திரி தோப்பிலுள்ள கோயிலில் விவசாயி அடித்துக்கொலை! 

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

Panruti temple in cashew grove farmer incident

 

 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள நடுமேட்டுக்குப்பதிலுள்ள  முந்திரி தோப்பின் நடுவே அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஊரணி, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.  ஒரு சிலருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் கோயிலுக்கு அழைத்துவந்து பூஜை செய்தால் உடல் நிலை சரியாகிவிடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் (09.09.2020) கோயிலில் படையில் வைக்க ஒரு பிரிவினர் கோயிலுக்கு சென்றிருந்தனர். அப்போது கோயில் முன் மர்ம நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள், காடம்புலியூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து அங்கு விரைந்துசென்ற போலீசார் இறந்தவர் குறித்து விசாரணை செய்தனர். அவர் நடுமேட்டுக்குப்பத்தை சேர்ந்த ரவி என்பது தெரியவந்தது. 43 வயதாகும் கூலித் தொழிலாளியான இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும்,  விஜயகுமார், விஜயபாரதி என்ற 2 மகன்களும், பிரதீபா என்ற ஒரு மகளும் உள்ளனர். 

 

ஜெயந்தி சாலைவிபத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். அதனால் மன வேதனையடைந்த ரவி மதுவுக்கு அடிமையாகி,  சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் முந்திரி தோப்பிலுள்ள நொண்டி வீரன் கோவிலில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்ததால் அவரை யாராவது அடித்து கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

மேலும் கொலை செய்யப்பட்ட ரவியின் சடலம் உடல் பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ரவி அடித்துக்கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமாக அடித்து கொல்லப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் கோயில் பூசாரி உள்ளிட்ட 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.