Skip to main content

என்.எல்.சியில் பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்வு! 

Published on 12/05/2020 | Edited on 13/05/2020
cccc



கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா,  தமிழ்நாடு, புதுச்சேரி என தென்மாநிலங்களின்  மின்சார தேவையை பூர்த்தி செய்து வருகிறது.


இந்நிலையில கடந்த  (07.05.2020) மாலை இரண்டாவது அனல் மின் நிலையத்தின் அலகு 6-ல் நிலக்கரி  எரியூட்டும் கொள்கலன் எனப்படும் பாய்லர் வெடித்ததில் 8  பேர் பலத்த தீக்காயங்களுடன் என்.எல்.சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் திருச்சியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

 

 


அதில் கடந்த 08.05.2020 அன்று  நிரந்தர ஊழியர் சர்புதீன் (53) என்பவரும், 10.05.2020 அன்று சண்முகம் என்ற ஒப்பந்த தொழிலாளியும் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தனர். இந்நிலையில் அதே விபத்தில் சிக்கிய தெற்கிருப்பு கிராமத்தை சேர்ந்த நிரந்தர தொழிலாளி பாவாடை (45) என்பவர் இன்று (12.05.2020) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 3 பேர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத்தடுத்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்ததால் சக தொழிலாளர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்