Skip to main content

குழந்தை உயிரிழந்த வழக்கு; போலீசாரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டி தப்பிய கும்பல்

Published on 25/01/2023 | Edited on 25/01/2023

 

cuddalore district neyveli five years child incident 

 

கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த தொப்புளிகுப்பம் கிராமத்தில் கமலம், அவரது மகள் அஞ்சலை மற்றும் மகன் அருள்முருகன் ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கமலத்தின் வீட்டில் வேலை செய்த உக்காண்டி-ராஜேஸ்வரி தம்பதியின் இரண்டாவது மகளான 5 வயது பெண் குழந்தை, முதனை கிராமத்தின் அருகே உள்ள முந்திரிக்காட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் கமலம், அஞ்சலை மற்றும் அருள்முருகன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் கடந்த இரண்டு வருடங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில், சேத்தியாத்தோப்பு அடுத்த கரைமேடு கிராமத்தை சேர்ந்த பிரதாப் மற்றும் அவரது கூட்டாளிகள் தொப்புளிகுப்பத்தில் உள்ள கமலம் மற்றும் அவரது மகள் அஞ்சலையை கொலை செய்வதற்காக இன்று அதிகாலை வந்துள்ளனர். இதுகுறித்து முன்னதாகவே தெரிந்து கொண்ட கமலம் மற்றும் அவரது மகள் அஞ்சலை காவல்துறையினருக்கு தகவல் அளித்ததால் எஸ்.ஐ. அழகிரி தலைமையிலான கிரைம் போலீசார் கமலம் வீட்டில் பதுங்கி இருந்தனர்.

 

அப்போது கமலத்தின் வீட்டிற்குள் புகுந்த பிரதாப் மற்றும் அவரது கூட்டாளிகள் கமலம் மற்றும் அவரது மகள் அஞ்சலையை மிரட்டிய போது, மறைந்திருந்த காவல்துறையினர் அவர்களை பிடிக்க முற்பட்டனர். அப்போது திடீரென பிரகாஷ் என்பவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை பார்த்து  சுட்டுவிடுவதாகக் கூறி, சினிமா பட பாணியில்  துப்பாக்கி முனையில் காவல்துறையினரை மிரட்டிவிட்டு, அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவின் பேரில், துப்பாக்கி முனையில் போலீசாரை மிரட்டி தப்பித்த குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அஞ்சலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அந்த புகாரில், தங்களது வீட்டில் வேலை செய்த தம்பதியினரின் குழந்தை மீனா கீழே தவறி விழுந்து உயிரிழந்தது. அவ்வழக்குக்கான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மீனாவின் பெற்றோர் சாட்சியம் அளித்துவிட்டனர். சாட்சி சொன்ன உக்காண்டி- ராஜேஸ்வரி ஆகிய இருவரையும் கடந்த இரண்டு வருடங்களாக மேலக்குப்பத்தை சேர்ந்த இளங்கோவன் மனைவி சுந்தரி என்பவரும், சுந்தரி உடன் திருமணம் தாண்டிய உறவில் இருக்கும் ரவிபிரகாஷ் என்பவரும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு 10 லட்ச ரூபாய் பணம், மூணு சென்ட் நிலம் தரம் வேண்டுமெனவும், அவ்வாறு தரவில்லை என்றால், மறுபடியும் சாட்சிகளை மாற்றி சொல்ல வைப்போம் எனவும், ஜாமீனை ரத்து செய்து விடுவோம் எனவும் மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அவ்வாறு பணம் தர மறுத்ததால் இன்று தங்களது வீட்டிற்குள்  புகுந்து துப்பாக்கியை காட்டி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையினரை துப்பாக்கியை காட்டி மிரட்டி குற்றவாளிகள் தப்பித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.