Skip to main content

தடுப்பூசியால் குழந்தை இறந்ததாகக் கூறி காவல் நிலையம் முற்றுகை... பெற்றோர் போராட்டம்!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

cuddalore district four year child incident parents police station

 

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டு அருகேயுள்ள அ.புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்- ஹேமலதா தம்பதி, தங்களின் நான்கு வயது குழந்தைக்கு நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

 

அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (01/07/2020) நடைபெற்ற வாராந்திர முகாமில் குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் அன்று இரவு குழந்தை அழுதுகொண்டேயிருக்க தடுப்பூசி போட்டதால்தான் குழந்தை அழுகிறது என பெற்றோர் நினைத்துத் தூங்க வைத்துள்ளனர். மறுநாள் அதாவது நேற்று (02/07/2020) காலை எழுந்து பார்த்தபோது அந்தக் குழந்தை எதிர்பாராத விதமாக இறந்து விட்டது. 

 

தடுப்பூசி போடப்பட்டதால் தான் குழந்தை இறந்துள்ளது எனக் கருதி, தடுப்பூசி போட்ட மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியரைக் கைது செய்ய வலியுறுத்தி நடுவீரப்பட்டு காவல் நிலையத்தைப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து கலைந்துச் சென்றனர். 

 

பின்னர் நடுவீரப்பட்டு காவல்துறையினர் குழந்தையின் இறப்பைச் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து குழந்தையின் சடலத்தைக் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.