Skip to main content

பத்திரமாக பார்த்துக் ‘கொல்லவும்’!- சிதம்பரம் காவல்நிலைய அவலம்!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

cuddalore district chidambaram police station wall written tamil words

 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் போலீஸின் இரட்டைப் படுகொலையால் தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் சூழலில் கடலூர் மாவட்ட சிதம்பரம் நகர காவல்நிலைய சுவற்றில் எழுதப்பட்ட விழிப்புணர்வு வாசகங்களால் விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறார்கள் புகார் கொடுக்கச் செல்லும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும்.  

 

cuddalore district chidambaram police station wall written tamil words

 

அதாவது, “பெண்கள் அணிந்து இருக்கும் அணிகலன்களைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும்” என்று எழுதுவதற்குப் பதில், பெண்கள் அணிந்து இருக்கும் அணிகலன்களைப் பத்திரமாக பார்த்துக் ‘கொல்லவும்’ என்று எழுதப்பட்டிருப்பதுதான் அதிர்ச்சிக்குக் காரணம். அதுமட்டுமல்ல, “பெண்கள் தங்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க தற்காப்புக் கலை கற்றுக்கொள்ளவேண்டும்” என்பதற்குப் பதிலாக பெண்கள் தங்களை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க தற்காப்புக் கலை கற்றுக் “கொல்ல” வேண்டும் எழுதப்பட்டிருப்பது தமிழை இப்படியா கொல்ல வேண்டும்? என்று கேள்வி எழுப்புகிறார்கள். 

 

cuddalore district chidambaram police station wall written tamil words

 

இப்படி, பல்வேறு எழுத்துப்பிழைகளுடன் இடம் பெற்றிருக்கின்றன சிதம்பரம் நகர காவல்நிலைய சுவற்றில் எழுதப்பட்டிருந்த விழிப்புணர்வு வாசகங்கள். புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகளுடன் காவல் நிலையங்களுக்கு வருவதால் இந்தப் பிழைகளைக் கண்டுபிடித்தால் கூட போலீஸிடம் எப்படிச் சொல்வது என்று தயக்கத்துடன் கடந்து சென்றுவிடுவார்கள். ஆனால், அங்குபணிபுரியும் காவலர்கள் ஒருமுறை கூடவா சுவற்றில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று கவனிக்கவில்லை? ஏற்கனவே காவல்நிலையங்களில் அழைத்துச் செல்லும் அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படுவது சர்ச்சையாகிக்கொண்டிருக்கும் சூழலில் இப்படிப்பட்ட பிழைகளைத் திருத்திவிட வேண்டுமல்லவா? என்று கேள்வி எழுப்புகிறார்கள் சிதம்பரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள்.

 

cuddalore district chidambaram police station wall written tamil words

 

எத்தனையோ கொலைகளைக் கண்டுபிடிக்கும் சிதம்பரம் நகர காவல்நிலைய எஸ்.ஐ., இன்ஸ்பெக்டர், ஏ.எஸ்.பி., டி.எஸ்.பி., எஸ்.பி உள்ளிட்ட காவல்துறையினர் காவல்நிலையத்தின் சுவற்றில் தமிழைப் படுகொலை செய்த பின்னணியைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பார்களா?  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.