Skip to main content

தமிழ்நாடு அரசு பேருந்து மோதி உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்திற்கு 1.94 கோடி இழப்பீடு...

Published on 22/07/2020 | Edited on 22/07/2020
cuddalore district court

 

தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்து மோதி உயிரிழந்த புதுவை ஆசிரியர் குடும்பத்திற்கு 1.94 கோடி இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

புதுச்சேரி தட்டாஞ்சாவடியை சேர்ந்தவர் ஆசிரியர் ஒபிலியன் (45). இவர்  புதுச்சேரி முதலியார்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 2017 பிப்ரவரி 1ஆம் தேதி சென்னை -கும்பகோணம் சாலையில் கார் ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூர் மாவட்டம், வடலூர் அருகிலுள்ள மருவாய் தரைப்பாலம் அருகில் அவரது கார் சென்றபோது எதிரில் வந்த அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் ஆசிரியர் ஒபிலியன் உயிரிழந்தார்.

 

அவரது இறப்பிற்கு இழப்பீடு வழங்கக்கோரி அவரது குடும்பத்தினர் கடலூர் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் அதே ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி வழக்கு தொடர்ந்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் மற்றும் யுனைடெட் இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மீது தொடர்ப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இருதய ராணி, இறந்த ஆசிரியர் ஒபிலியன் குடும்பத்திற்கு ஒரு கோடியே 94 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் அவர் அந்த தீர்ப்பில் இந்த இழப்பீடு தொகையை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 50 சதவீதமும், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி 50 சதவீதமும் பகிர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்திற்கு வழங்க வேண்டுமாறு தீர்ப்பில் கூறியுள்ளார் இந்த வழக்கில் மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் சிவமணி சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் ஆஜராகி உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எதிரணியாக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள் வாக்கு சேகரிக்கிறேன்” - தங்கர்பச்சான்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Constituency pmk  candidate director Thangabachan launched  campaign

கடலூர் தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கபாச்சன் அவரது மாந்தோப்பில் பிரச்சாரத்தை துவக்கி பாமக மற்றும் கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.

கடலூர் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் இயக்குநர் தங்கர்பாச்சன் செவ்வாய்க்கிழமை அவரது சொந்த ஊரான பத்திரக்கோட்டையில் உள்ள அவரது மாந்தோப்பில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். அப்போது அவர் பேசியதாவது கும்பல், கும்பலாக கூடி பேசாமல், தனித்தனியாக வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும். இந்த தேர்தல் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும், என்னிடம், எதிரணியராக இருந்தாலும் அடையாளம் காட்டுங்கள், அவர்களிடம் நான் பேசி வாக்கை பெறுகிறேன்.

நான் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சியுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். தற்போது  அரசியலுக்காக வெளியே வந்துள்ளேன். பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றிக்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். சமூக வலைத்தளங்களில் பரப்புவதை மட்டும் நமது நோக்கமாக இருக்கக் கூடாது, அது வாக்காக மாறாது. கட்சியின் கொள்கைகளை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தால் பல லட்சம் வாக்குகளாக மாறும். இந்தத் தொகுதியில் அன்புமணி மைத்துனர் நிற்பதாக கூறி வருகிறார்கள். யார் நிற்பதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. தேர்தல் பணியை மேற்கொள்ளுங்கள் என்றார். இவருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story

கடலூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Cuddalore Parliamentary Constituency Congress candidate filing nomination

கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எம்.கே.விஷ்ணு பிரசாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.  இதனைத் தொடர்ந்து இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், காங்கிரஸ் கட்சியினர், கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைத்து முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருடன் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே எஸ் அழகிரி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து  வேட்பாளர் வேட்பாளர் எம். கே. விஷ்ணு பிரசாத் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கடலூர் பாராளுமன்ற தொகுதியான நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வெளிமாநிலத்தில் உள்ளவர்கள் அதிக அளவில் பணியில் உள்ளனர். இதில் தமிழகத்தில் உள்ளவர்களை பணியாற்ற நடவடிக்கை எடுப்பேன். மேலும் கடலூர் தொகுதிக்கு நான் புதியது என்றாலும் இங்குள்ள அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் சி.வெ கணேசன் ஆகியவரின் அறிவுறுத்தல் படி  தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வேன்” என கூறினார்

இந்நிகழ்வில் எம்எல்ஏக்கள் கடலூர் ஐயப்பன்,  நெய்வேலி சபா ராஜேந்திரன், விருதாச்சலம் ராதாகிருஷ்ணன், கடலூர் மாநகராட்சியின் துணை மேயர் தாமரைச்செல்வன், திமுக நகர செயலாளர் ராஜா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.