கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே எய்யலூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் மெகா போர்வெல் அமைத்து கடலூர் மாவட்டத்திற்கு கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் எடுத்து செல்லபடுகிறது. ஆனால் இந்த பகுதியில் உள்ள மக்களுக்கு கடந்த 3 மாதமாக குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வந்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தபட்ட ஊராட்சி செயலாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ma_2.jpg)
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் எய்யலூர் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைசெயலாளர் அன்புமணி தலைமையில் மாவட்டக்குழு உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட பொதுமக்கள் எய்யலூரில் சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எய்யலூர் – காட்டுமன்னார்கோவில் சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காட்டுமன்னார்கோயில் வட்டார வளர்ச்சி அதிகாரி இரண்டு நாட்களில் சரிசெய்து கொடுக்கிறேன் என்று உறுதியளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)