Skip to main content

மழைநீரில் மூழ்கிய பயிர்கள்!!! வேதனையில் விவசாயிகள்...

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

Crops submerged in rainwater

 

 

வங்க கடலில் உருவான ‘புரெவி’ புயலால் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் நான்கு நாட்களாக மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கியதோடு விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியிருக்கிறது.

 

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி இலங்கை முல்லைத்தீவு பகுதியில் கரையை கடந்தது. இந்த புயல் சின்னம் காரணமாக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நான்கு நாட்களாக மழை கொட்டித் தீர்த்துவருகிறது. கடலோர பகுதிகளில், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. ஆறுகளில் ஆங்காங்கே உடைப்பெடுக்கும் அபாயமும் உறுவாகியுள்ளது.

 

டெல்டா மாவட்டங்களில் முதற்கட்டமாக சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் தற்போது சூல் தண்டு உருளும் பருவத்தில் இருப்பதால் தொடர் மழையைத் தாங்கி நிற்கிறது. ஆனால், தாளடி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட 30 நாட்களே ஆன இளம் பயிர்களும், கதிர்வந்த பயிர்களும் மழை வெள்ளத்தில் சாய்ந்து மூழ்கியுள்ளது. மழை தொடர்ந்தால் இளம் பயிர்கள் அழுகிவிடும். அதோடு விளைந்து சாய்ந்த பயிர்கள் முற்றிலுமாக அழுகிவிடும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் வேதனைபடுகின்றனர்.

 

இதுகுறித்து பந்தநல்லூரைச் சேர்ந்த பாரி உள்ளிட்ட விவசாயிகள் கூறுகையில், "முறையாக ஆறுகளும் வாய்க்கால்களும் தூர்வாரப்படாததே பயிர்கள் முழ்கக் காரணம். வழக்கமாக பெய்யக்கூடிய மழைதான், இந்த ஆண்டும் பெய்கிறது. வருடா வருடம் தூர்வாருவதற்காக ஒதுக்கப்படும் நிதியை முறையாக செலவழிக்காததால், பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரிமிப்புக்கு உள்ளாகி தண்ணீர் வடிய வழியின்றி இப்படி பயிர்கள் முழுவதும் நாசமாகி இருக்கிறது. இதற்கு அ.தி.மு.க. அரசே பொறுப்பேற்க வேண்டும்"  என்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Chance of rain in 4 districts

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீரின்றி வனப்பகுதிகள் வறண்டு இருப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிக்கு தண்ணீர் தேடி வரும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கிறது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையின் வனப்பகுதிகளில் கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

வெயிலின் கொடுமையில் மக்கள் அல்லல்படும் நிலையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருநெல்வேலி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (15.04.2024) காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

திணறும் தலைநகர்; டெல்டாவில் வெடித்த விவசாயிகளின் போராட்டம்! 

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
rally in Delta district in support of Delhi struggle

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை, விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையை அமல்படுத்து என்பன உள்ளிட்ட வேளாண் கோரிக்கைகளை வலியுறுத்த பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டிராக்டர்களில் உணவு, மருந்து பொருட்களுடன் இந்தியத் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தச் சென்ற போது மாநில எல்லையிலேயே முள்வேலிகள், தடுப்புக்கட்டைகள் அமைத்து  தடுக்கப்பட்டனர்.

தடுப்புக்கட்டைகளை தகர்த்தெரிந்த விவசாயிகள் தடையை மீறி டெல்லி நோக்கி புறப்பட்ட போது சொந்த நாட்டு விவசாயிகள் மீதே கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் தண்ணீரை பீய்ச்சி அடித்தும் நிலைகுலையச் செய்தனர். அந்த தடைகளையும் தாண்டிச் செல்லும் போது ரப்பர் குண்டுகளால் சுடப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளால் ஏற்பட்ட நச்சுப் புகையால் மூச்சுத் திணறிய 65 வயது கியான் சிங் என்ற விவசாயியும், ரப்பர் குண்டு அடிபட்டு தலையில் காயமடைந்த 21 வயது இளம் விவசாயியும் போராட்டக்களத்திலேயே உயிர்நீத்தனர். இதற்கிடையில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

rally in Delta district in support of Delhi struggle

அதன் பிறகும் விவசாயிகளை முன்னேற விடாமல் மத்திய அரசின் போலீசார் தடுத்து வருகின்றனர். விவசாயிகள் உயிர்ப்பலியானதால் தற்காலிகமாக முன்னேறிச் செல்வதை நிறுத்தி அதே இடத்தில் தங்கியுள்ளனர். அடுத்தகட்டமாக விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்துவிடாமல் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவர் அரணாக உள்ளது.

இந்திய விவசாயிகளுக்காக டெல்லி எல்லையில் போராடும் பஞ்சாப், அரியானா விவசாயிகளின் கோரிக்கைகளை வென்றெடுக்கவும், விவசாய நாடு என்று வெளியில் சொன்னாலும் சொந்த நாட்டு விவசாயிகளையே சுட்டு விரட்டும் மத்திய அரசை கண்டித்தும் இந்தியா முழுவதும் விவசாயிகள் போராட்டம் பற்றிக் கொண்டுள்ளது.

rally in Delta district in support of Delhi struggle

இந்த வகையில் புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட விவசாயிகள் ஒன்றிணைந்து மாவட்ட எல்லை கிராமமான ஆவணம் கைகாட்டியில் டிராக்டர் பேரணியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்த நிலையில் நள்ளிரவில் அனுமதி மறுக்கப்பட்டது. தொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்திற்கு வந்த டிராக்டர்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தினர். ஆனால் திட்டமிட்டபடியே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடந்த இடத்திற்கு வந்த டிராக்டர்களையும் ஓரமாக நிறுத்தி வைத்திருந்தனர். அதே நேரத்தில் பாஜகவினரும் அதே பகுதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.