Skip to main content

பட்டாசு குடோன் வெடி விபத்து – கணவன், மனைவி பலி

Published on 18/01/2023 | Edited on 18/01/2023

 

crackers fire accident in Dindigul police investigation

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரக்கல் ஊராட்சியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி மகன் ஜெயராமன். இவர் இந்து முன்னணியில் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக இருக்கிறார். இவர், தனது மனைவி நாகராணி மற்றும் குழந்தைகள் தீப்திகா, கனிஷ்கா, போகன் ஆகியோருடன் செம்பட்டி - வத்தலக்குண்டு சாலையில் புல்வெட்டி கம்மாய் அருகே வசித்து வந்தார்.  

 

புல்வெட்டி கம்மாய் அருகே உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தின் கீழ்த்தளத்தில் 5 கடைகள் உள்ளன. 5 கடைகளிலும் பட்டாசுகள் மற்றும் வானவேடிக்கைக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசுகள் உள்ளன. கட்டடத்தின் மேல்தளத்தில் தனது குடும்பத்துடன் ஜெயராமன் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.

 

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் ஜெயராமனின் குழந்தைகள் மூவரும் வணிகம் வளாகம் முன்பு காலி இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். மேலே ஜெயராமன், அவரது மனைவி நாகராணி மற்றும் பணியாட்கள் ஆகியோர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடிக்கத் தொடங்கியது. இதில் கட்டடத்தின் மூன்று தளங்களும் தரைமட்டமானது. கட்டடத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த 5 கார்களும் சேதமடைந்தன. கட்டடத்தின் கீழே பட்டாசுக்கடை முன்பு நின்று கொண்டிருந்த மூவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

 

வெடிவிபத்து குறித்து அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன், ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. முருகேசன், காவல் ஆய்வாளர்கள் வெள்ளையப்பன், செந்தில்குமார் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததுடன் விரைந்து வந்து கட்டடத்தின் மேல்பகுதியில் தண்ணீரைப் பீச்சி அடித்து பட்டாசுகளை வெடிக்காமல் செய்துவிட்டு கட்டடத்தின் இடிபாடுகளை அப்புறப்படுத்தி உள்ளே சிக்கி இருந்த நபர்களை மீட்க முயன்றனர். 

 

crackers fire accident in Dindigul police investigation

 

உடனடியாக மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு மின் கம்பிகள் அப்புறப்படுத்தப்பட்ட பின்பு நான்கு பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு கட்டட இடிபாடுகளை அப்புறப்படுத்தினார்கள். இச்சம்பவம் குறித்த தகவல் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து அப்பகுதியில் பொதுமக்களும் இளைஞர்களும் குவிந்தனர்.

 

இந்த விபத்தில் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி இருவரும் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார், பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளால் வெடி விபத்து ஏற்பட்டதா? அல்லது சிலிண்டரால் விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.