Skip to main content

நடப்பது மோடி ஆட்சி அல்ல ஹிட்லரின் ஆட்சி - சிபிஎம் போராட்டத்தில் தலைவர்கள் பேச்சு! 

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

குடியுரிமை சட்டத் திருத்தச் மசோதாவை எதிர்த்து சிபிஐ (எம்) சார்பில் தோழமைக் கட்சிகள் பங்கேற்கும் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெற்றது.

 

cpm


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு  திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளர்  ஆர்.எஸ். பாரதி எம்.பி., மதிமுக பொதுச் செயலாளர்  வைகோ எம்.பி., விசிக தலைவர் திருமாவளவன், சிபிஐ (எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கோபண்ணா,மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் கே.எம். ஜவாஹிருல்லா, முஸ்லீம் லீக் கட்சியின் அகில இந்திய தலைவர் பேரா. காதர் மொய்தீன், இந்து குழுமத்தின் தலைவர் என். ராம், மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர். பிரசாத், ஆர். வைகை, மூத்த ஊடகவியலாளர் திரு. ஜென். ராம், சமூக செயல்பாட்டாளர் பேரா. அ. மார்க்ஸ், ஃப்ரண்ட்லைன் ஆசிரியர், ஆர். விஜயசங்கர், கல்வியாளர் தாவூத் மியாகான் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் அ. பாக்கியம், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல். சுந்தர்ராஜன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

cpm



இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், ஆர்ப்பாட்டம் நடத்த கூட தமிழகத்தில் அனுமதி கிடையாது என்ற நிலை தற்போது உள்ளது. இந்த போராட்டம் தீர்வு காணும் வரை ஒரு தொடர் போராட்டமாக நடைபெறும். இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 19 ஆம் தேதி நாடுமுழுவதும் போராட்டம் நடத்த இடதுசாரிகள் முடிவு எடுத்து உள்ளது. எனவே இது ஒரு தொடர் போராட்டமாக இருக்கும். ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத கட்சி மத்தியில் ஆட்சியிலும் எதற்கும் கை தூக்குகிற கைக்கூலிகளாக இங்கு இருக்கிற அதிமுக ஆட்சி உள்ளது.

மோடி ஆட்சி அல்ல ஹிட்லரின் ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. அமித்ஷா ஒரு கோயபெஸ் ஆக இருக்கிறார். ஹிட்லர்க்கு உதவியாக இருந்தவர். ஹிட்லருக்கு ஏற்பட்ட முடிவு மோடிக்கு ஏற்பட கூடாது என்றுதான் நான் நினைக்கிறேன். எதைப்பற்றியும் கவலைப்படாமல் மோடியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 60 சதவீதம் மக்கள் பாஜகவுக்கு எதிராகதான் இருக்கிறார்கள். பாஜகவின் பினாமி கட்சியாக மாநிலத்தில் இருக்க கூடிய அதிமுக ஆட்சி உள்ளது.

நாடு படிப்படியாக ராணுவமாக மாறி வருகிறது. டெல்லியில் நடந்த போராட்டத்தில் மாணவர்கள் ஏதும் செய்யவில்லை அனைத்து காவல்துறை செயத்தது அமித்ஷாவிற்கு கட்டுப்பட்ட காவல்துறை இன்று டெல்லியை கைப்பற்றி உள்ளது. தேசம் காப்பாற்ற பட வேண்டும், அரசியல் அமைப்பு சட்டம் காப்பாற்ற பட வேண்டும் என்றால் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார்.

 

cpm

 

ஜவாஹிருல்லா பேசுகையில், அம்மா ஆட்சி என்று சொல்லக்கூடிய எடப்பாடி ஆட்சி,மற்றும் பாமக கட்சியும் சேர்ந்து தமிழர்கள் முதுகில் குத்துகிறார்கள். மோடி ஆட்சி பொருளாதார நெருக்கடி, வேலை வாய்ப்பு இல்லாமை போன்ற திட்டங்களில் இருந்து திசை திருப்பும் முயற்சியில் மோடி அவர்கள் செயல்பட்டு வருகிறார். இதற்கு உதவியாக இருந்த அதிமுகவை கண்டித்து முதல்வர், மற்றும் துணை முதல்வர், வீட்டை வரும் 18 ஆம் தேதி முற்றுகை இட உள்ளோம். அமித்ஷா அவர்களின் அப்பனையும் பார்த்த சமுதாயம் நாங்கள் என்றார். 

விடுதலைசிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், 


 

cpm

 

இவர்கள் ஆட்சிக்கு வந்த சிறிது காலத்திலே முஸ்லீம்களுக்கு எதிரான செயல்களை செய்ய தொடங்கி விட்டார்கள். இந்த குடியுரிமை திருத்த சட்டம் வெளிப்படையாக இஸ்லாமியர்களுக்கு எதிராக கக்கி கொண்டு இருக்கிறது. வெளிப்படையாக இஸ்லாமியர்களை மிரட்டி வருகிறது இந்த அரசு. இவர்கள் நிறைவேற்றிய அனைத்து திட்டங்களும் சன்பரிவார் அமைப்புகளின் கனவாகும். இஸ்லாமியர்களுக்கு மட்டும் குடியுரிமை இல்லை என்பதை அவர்கள் தெளிவாக நிறைவேற்றி உள்ளார்கள்.

ஈழத்தில் இருந்தும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வந்துள்ளார்கள். ஆனால் மோடிக்கும், அமித்ஷாவின் கண்களுக்கு தெரியவில்லை. இந்த சட்டம் மதவாத அடிப்படையில் இயற்றப்பட்டுள்ளது. மோடி கும்பலுக்கு இந்த அரசமைப்பு சட்டத்தை மதிக்க அவசியம் இல்லை. சாதி அடிப்படையில் சிந்தித்தவர் அம்பேத்கர் அல்ல சாதியை ஒழிக்க வேண்டும் என்று சிந்தித்தவர். அரசியல் அமைப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்வதுதான் அவர்களின் திட்டமாக உள்ளது. இந்தியா முழுவதும் அணிதிரண்டு போராட வேண்டிய நிலைமை உள்ளது.

நாம் அனைவரும் ஒன்று திரண்டு போராடாவிட்டால் சனாதன அமைப்புகள் ஆட்சி இங்கு மேலோங்கி நிற்கக்கூடும். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றார். 
 

cpm


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், இந்திய குடியுரிமை சட்டம் 64 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தப்பட்டு திருத்த சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அனைவரும் ஒன்றிணைந்து வாக்களித்திருந்தால் அந்த சட்டம் இன்று நிறைவேறி இருக்காது. வரலாற்றின் உண்மைகளை மறைத்து வைக்கவும் முடியாது, திருத்திவைக்கவும் முடியாது. அமித்ஷா என்னை பற்றி முழுமையாக அறியாதவர்.

பாராளுமன்றத்தில் பாஜகவை பொறுத்தவரை எந்த கொள்கைக்கும் மாறாக நாங்கள் முடிவு எடுத்தது கிடையாது என்ற ஒரு அப்பட்டமான பொய்யை அமித்ஷா கூறினார்.

காஷ்மீருக்கு ஏற்பட்ட விழிப்புணர்வு இந்தியாவிற்கு ஏற்படவில்லை, ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்டு விட்டது. அடுக்கடுக்காக ஆபத்துகள் வரும்போது தான் அதனுடைய தாக்கம் நமக்கு தெரிகிறது. ஒரே நாடாக இருக்க வேண்டும் என்றால் இந்த திட்டம் தடுக்கப்பட வேண்டும். டெல்லி பல்கலை மாணவர்கள் போர்க்களம் புகுந்து விட்டார்கள். தமிழ்நாட்டிலும் மாணவர்கள் போராட ஆரம்பித்து விட்டார்கள். அரசியல் கட்சிகள் வர வேண்டாம் என்று கேட்டு கொண்டார்கள் நல்லது மணவர்களாக போராடட்டும் என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.