Skip to main content

15 வயது சிறுமி கொடூரக் கொலை; இருவருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

court judgement came for villupuram fifteen years young girl child incident

 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சிறுமதுரை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது 50). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரது கடையை ஒட்டி இளையபெருமாள் என்பவர் நிலத்தை விலைக்கு வாங்கிய அதே ஊரைச் சேர்ந்த கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகிய இருவரும் விவசாயம் செய்து வந்தனர். பெட்டிக்கடை ஜெயபால் தங்கள் நிலத்தில் குப்பையை கொட்டி நாசம் செய்வதாக இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அவ்வப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு  நடந்து வந்துள்ளது.

 

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் தேதி பெட்டிக்கடை ஜெயபாலின் மகளான 15 வயது சிறுமி முருகன், கலியபெருமாள் ஆகிய இருவரையும் கெட்ட வார்த்தையில் திட்டியதால் சிறுமி மீது ஏற்பட்ட கோபத்தில் சிறுமியை கொலை செய்ய முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரும் திட்டம் தீட்டினர். அதன்படி கலியபெருமாள் மற்றும் முருகனின் உறவினர் பிரவீன் குமார் என்பவர் ஜெயபால் பெட்டிக்கடைக்குச் சென்று தகராறு செய்துள்ளார். அப்போது ஜெயபாலின் மகன் ஜெயராஜிக்கும் பிரவீன் குமாருக்கும்  இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஜெயராஜ் மீது பிரவீன் குமார் தாக்குதல் நடத்தியதால் படுகாயம் அடைந்த ஜெயராஜை அவரது குடும்பத்தினர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

 

இதையடுத்து மறுநாள் (10.05.2020) 15 வயது சிறுமி மட்டும் பெட்டிக்கடையில் தனியாக இருந்துள்ளார். அதைப் பயன்படுத்திக் கொண்ட முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரும் மண்ணெண்ணெய் கேனுடன் சென்று சிறுமியின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டு தலைமறைவாகிவிட்டனர். தீ விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி அப்போது அளித்த மரண வாக்குமூலத்தில், "முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவரும் தனது கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து சிகிச்சை சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

 

இந்த சம்பவம் தொடர்பாக திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில் நீதிபதி ஹெர்மிஸ், சிறுமியை தீ வைத்து எரித்து கொலை செய்த குற்றத்திற்காக கலியபெருமாள் மற்றும் முருகன் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் தலா 85 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் சங்கீதா ஆஜராகி வாதாடி இருவருக்கும் தண்டனை பெற்று தந்துள்ளார். சிறுமி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.