Skip to main content

நாடு என்னவாகும் என உலுக்குகிறதா மனம்? -கமல்ஹாசனின் கடவுள்!

Published on 29/03/2020 | Edited on 29/03/2020

‘வேண்டாம் மகனே! 108 ஆம்புலன்ஸ் வேலை!’ என்னும் தலைப்பில், மகன் பாண்டித்துரையிடம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அவரது பெற்றோர் பாசத்தோடு கெஞ்சுவதும், சமூக அக்கறையோடு அவர் மறுப்பதும்,   வலைத்தளங்களில் வைரலாகி வருவது குறித்து, நேற்று நக்கீரன் இணையத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பாண்டித்துரை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சிலாகித்திருக்கிறார்.
 

 Is the country shaking as it turns out? -The God of Kamal Haasan!

 

‘108 ஓட்டுநர் பாண்டித்துரை..
நீங்கள் என் நம்பிக்கையின் நாயகன்.
இவர்போல, தன்னலம் பாராது
நாட்டிற்காக முன்னிற்கும் வீரர்கள் தான்
நம் தேசத்தை இயக்குபவர்கள்.
பாசத்தில் கதறும் அவரின் பெற்றோரின் குரல்,
உள்ளத்தை உலுக்கும்போது நாடு என்னவாகும்?
என்று கேட்கும் அந்த மனம்தான் கடவுள்!
கட உள்’

கமல்ஹாசனின் இந்த ட்விட்டர் பதிவு, சேவையாளர்களுக்கு ஆறுதலாகவும், எதையும் வேடிக்கை பார்ப்பவர்கள் மனதில் சேவை உணர்வை தூண்டுவதாகவும் அமைந்திருக்கிறது. 

 

 Is the country shaking as it turns out? -The God of Kamal Haasan!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆபத்தான நிலையில் கர்ப்பிணிப் பெண்; சாதுரியமாக செயல்பட்ட 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
 108 Ambulance paramedic delivered twins to pregnant woman in labor pain

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வேப்பூர் பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ். கூலித் தொழிலாளியான இவரது மனைவி சந்தோஷம்மாள் (29) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு இந்த வாரம் பிரசவம் நடக்கும் என தோராய தேதி ஒன்றை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில் திடீரென  பிரசவ வலி அதிகமாக வந்துள்ளது. இது பிரசவ வலி என்பதை உணர்ந்த கணவர் சாம்ராஜ் மற்றும் அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆற்காட்டில் இருந்து  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது ஆம்புலன்ஸ். அப்போது பனிக் குடம் உடைந்து வலி அதிகமானது அவரை ஆம்புலன்ஸில் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது.

 108 Ambulance paramedic delivered twins to pregnant woman in labor pain

நிலைமையை உணர்ந்து அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஆம்புலன்ஸ்  மருத்துவ உதவியாளர் கவிப்பிரியா உடனே வேறு வழி இன்றி பிரசவம் பார்க்கத் தொடங்கினார். இதில் அந்த பெண்ணுக்கு அடுத்தடுத்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது.

இதனையடுத்து தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் என மூவரையும் உடனே ஆம்புலன்ஸ் மூலமாக வாலாஜாப்பேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டு நலமாக உள்ளனர்‌. பிரசவ வலிக்கு போராடிய பெண்ணுக்கு ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்து இரட்டை குழந்தை பெற்றெடுத்த அவருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் வெகுவாக பாராட்டுகளை தெரிவித்தனர்.

Next Story

108 ஆம்புலன்சில் பிரசவம்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
108 Relatives praise the employees who gave birth in the ambulance

108 ஆம்புலன்ஸ் சேவை பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ள சேவையாக உள்ளது. எந்த நேரத்திலும் எந்த ஊரில் இருந்து அழைப்பு வந்தாலும் அடுத்த குறிப்பிட்ட நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் வந்து நோயாளிகளை அழைத்துச் செல்கின்றனர்.

அதே போல நேற்று(17.3.2024) காலை ஆவுடையார்கோயில் தாலுகா ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காகச் சேர்க்கப்பட்ட செந்தமிழ் (வயது 26) என்ற கர்ப்பிணிக்கு கூடுதல் சிகிச்சை தேவைப்பட்டதால் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். அவசர அழைப்பிற்கு ஆவுடையார்கோயில் ஆம்புலன்ஸ் விரைந்து சென்று பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த செந்தமிழை ஏற்றிக் கொண்டு அறந்தாங்கி செல்லும் வழியில் செந்தமிழுக்கு வலி அதிகமானது.

அதனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜழகன் ஆம்புலன்சை ஓரமாக நிறுத்த ஆம்புலன்சின் அவசர கால மருத்துவ நுட்புணர் ஐஸ்வர்யா பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு சாலை ஓரத்திலேயே ஆம்புலன்ஸில் வைத்தே பிரசவம் பார்த்தார். சிறிது நேரத்திலேயே  ஆண்குழந்தை பிறந்ததைப் பார்த்து அருகில் இருந்த உறவினர்கள் நிம்மதியடைந்து ஆம்புலன்ஸ் பணியாளர்களை பாராட்டி நன்றி கூறினர். மேலும் சாலையோரம் ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்க்கப்பட்ட பெண்ணும் குழந்தையும் நலமுடன் இருந்தனர். தொடர்ந்து கூடுதல் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.