Skip to main content

“அமைதியை விரும்பியதால் நாடு பல பகுதிகளை இழந்தது”- ஆளுநர் ஆர்.என்.ரவி

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

“Country lost many areas because of want of peace”- Governor RN Ravi

 

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் சாஸ்திரி பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவி, லால் பகதூர் சாஸ்திரி சிலையைத் திறந்து வைத்தார்.

 

இந்தியாவின் இரண்டாவது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியின் முழு உருவ வெண்கலச் சிலையினை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நுங்கம்பாக்கத்தில் இருக்கும் சாஸ்திரி பவனில் திறந்து வைத்தார். ஆளுநரால் திறந்து வைக்கப்பட்ட லால்பகதூர் சாஸ்திரியின் சிலை 9.5 அடி உயரம் உடையதாகவும் 850 கிலோ எடை கொண்டதுமாகும். 15 லட்சம் செலவில் இந்த வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 

 

இதன் பின் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “லால் பகதூர் சாஸ்திரியைப் பொறுத்தவரை மிக எளிமையாக வாழ்ந்தவர். பொதுவாழ்வுக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். நமது நாட்டின் தேவை மற்றும் நமது நாட்டின் மீதான பார்வை ஆகியவற்றின் மீது மாற்றத்தைக் கொண்டுவந்தவர்.

 

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய போது நாடு அமைதியை விரும்பியது. அமைதி வழியில் இருக்க வேண்டும் என்று நாட்டின் ராணுவத்திற்கு தேவையான விஷயங்களை செய்யவில்லை. இதற்காகப் பல பகுதிகளை இழந்தோம். இருந்தும் எதிரிகள் நமது நாட்டின் பகுதிகளைத் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றனர்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என் நெஞ்சில் கை வைத்து தள்ளினார்...” - பா.ஜ.க. பெண் நிர்வாகி பரபரப்பு புகார்!

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
BJP conflict in the crowd; Complaint of the female administrator sensational

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் பா.ஜ.க. மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் தலைமையில் பா.ஜ.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட துணைத் தலைவர் மஞ்சு பார்கவிக்கும், மாவட்ட பொதுச் செயலாளர் ஹரிஹரனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாஜக பெண் நிர்வாகி மஞ்சு பார்கவி (வயது 38) நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில், ‘பா.ஜ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் ஹரிஹரன் தன் நெஞ்சில் கை வைத்து தள்ளினார்’ என பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பா.ஜ.க.வின் மத்திய சென்னை தொகுதி வேட்பாளர் வினோஜ் செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தபோது, பார்கவி அதிக ஆட்களை அழைத்து வந்ததாக கணக்கு காட்டி பணம் பெற்றதாகவும், இது தொடர்பாக பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டதாகவும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.