Skip to main content

சேலத்தில் கொசு மருந்து வாங்கியதில் ஊழல்; பேரூராட்சி உதவி இயக்குநர் உள்பட 4 பேர் மீது வழக்கு!

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

Corruption in the purchase of mosquito liquid in Salem assistant director of the municipality


சேலத்தில், கொசு மருந்து கொள்முதல் செய்ததில் பல லட்ச ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக வந்த புகாரின்பேரில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் உள்பட நான்கு பேர் மீது லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

சேலம், நாமக்கல் மாவட்ட பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. இங்கு திருஞானம் என்பவர் கடந்த 2014-2015- ஆம் ஆண்டில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தார். மாவட்டம் முழுவதும் உள்ள 385 கிராம ஊராட்சி பகுதிகளிலும் நோய்த்தடுப்பு பணிகளுக்காக கொசு மருந்து அடிப்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இப்பணிகளுக்காக கொசு மருந்து வாங்கியதில் முறைகேடு நடந்ததாக அப்போது புகார் எழுந்தது.

 

அதன்பேரில், சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் முதல்கட்ட விசாரணை நடத்தினர். பேரூராட்சிகளின் இயக்குநரின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றாமலும், அவரின் அனுமதி பெறாமலும் கொசு மருந்து வாங்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, கொசு மருந்து கொள்முதல் செய்யப்பட்ட நிறுவனம் அங்கீகாரம் பெறாமல் இருந்ததும், தரமற்ற மருந்தை வாங்கியிருப்பதும் தெரியவந்தது.

 

இந்த விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே திருஞானம் வேலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அங்கேயும் அவர் மீது இதேபோன்ற முறைகேடு புகார் எழுந்ததன்பேரில் அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

 

அதேபோல் சேலத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த செயல் அலுவலர் தர்மபுரிக்கு மாற்றப்பட்டு, அங்கு அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

 

இந்நிலையில், கொசு மருந்து கொள்முதலில் முறைகேடு குறித்த புகாரில் முகாந்திரம் இருந்ததை அடுத்து, உதவி இயக்குநர் திருஞானம், செயல் அலுவலர் நாகராஜன், இளநிலை உதவியாளர் ரஞ்சித்குமார், கெமிக்கல் நிறுவன உரிமையாளர் கோபிநாத் ஆகிய நால்வர் மீதும் மோசடி, போலி ஆவணங்களை தயாரித்தல், குற்றத்திற்கு உடந்தையாக இருத்தல் உள்பட 12 பிரிவுகளின் கீழ் சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.