Skip to main content

சுய ஊரடங்கு... அடுத்தடுத்து நடந்த 7 திருமணங்கள்!

Published on 22/03/2020 | Edited on 22/03/2020

கரோனாவிற்கு பயந்து, ஞாயிற்றுக்கிழமை சுயஊரடங்கு என அறிவிக்கப்பட்டிருக்க, வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளத்துடன் நாதஸ்வரம் இசைக்க அடுத்தடுத்து 7 திருமணங்கள் நடந்தேறியுள்ளது நெல்லை ஜங்சனில்..!


கரோனா தொற்று நோயினை மேற்கொண்டு பரவவிடாமல் தடுக்கும் பொருட்டு ஞாயிற்றுக்கிழமையன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை உரிய காரணமின்றி யாரும் வீட்டை விட்டு வெளியேற  வேண்டமென மக்களுக்கு வேண்டுகோளை விடுத்து, சுய ஊரடங்கை பிரதமர் அறிவித்தார். 

coronavirus peoples today seven marriage in nellai

அதைத் தொடர்ந்து 14 மணி நேர சுய ஊரடங்கு இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சுய ஊரடங்கு காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில் இரவு 09.00 மணி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. 
 

இதனால் தமிழகத்தில் கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்டுகள் உள்ளிட்ட அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ரயில்கள், பேருந்துகள், லாரிகள், கால் டாக்ஸி, ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் இயங்கவில்லை. இருப்பினும் தமிழகத்தில் மருந்தகங்கள், அம்மா உணவகங்கள் இன்று வழக்கம் செயல்படுகின்றன. 

coronavirus peoples today seven marriage in nellai

இது போல் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களான கோவில்கள், மசூதிக்கள், தேவாலயங்கள் மற்றும் இறை வழிபாட்டுத் தலங்களுக்கும் தாங்களாகவே வரையறை வகுத்திருக்க திருமணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. எனினும், இன்று காலை நெல்லை சந்திப்பிலுள்ள சாலைக்குமாரசுவாமி கோவிலில் பிரதான வாசல் சாத்தப்பட்டிருக்க, வெளியேறும் பகுதிக்கான வாசலை திறந்து அடுத்தடுத்து ஏழு திருமணங்களை நடத்தி வைத்துள்ளனர் கோவில் நிர்வாகத்தினர்.

coronavirus peoples today seven marriage in nellai

"இரண்டு மாதங்களுக்கு முன்னரே நிச்சயக்கப்பட்டது இத்திருமணங்கள்.! ஒவ்வொரு திருமண ஜோடிக்கும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கூடியிருக்க, வேத மந்திரங்கள் முழங்க, மேள தாளத்துடன் நாதஸ்வரம் இசைக்க எளிய முறையில் இத்திருமணங்கள் நடைப்பெற்றது. முதல் இரண்டு திருமணம் 6 மணி முதல் 7 மணி வரைக்கும், அடுத்தடுத்த திருமணங்கள் 8 மணி முதல் 9.30 மணி வரையிலும் நடைப்பெற்றது." என்கின்றனர் கோவில் ஊழியர்கள். சுய ஊரடங்கை பின்பற்றவில்லை என்கின்ற் குற்றச்சாட்டு ஒருபுறமிருக்க, மறுபுறமோ கரோனா வைரஸ் தொற்று நோய்க்கான மாஸ்க், கிருமி நாசினி உள்ளிட்ட அத்தியாவசிய பாதுகாப்பு முறைகளை பின்பற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.