Skip to main content

லீவில் சென்றவர்களுக்கே மீண்டும் லீவா? புலம்பும் காக்கிகள்!

Published on 04/06/2020 | Edited on 04/06/2020

 

Police work


சென்னையில் நாளுக்கு நாள் கரோனாவின் ஆட்டம் அதிகரித்துள்ள நிலையில், போலீஸ்காரர்களுக்கு சுழற்சி முறையில் 7 நாட்கள் விடுமுறை அளிக்க ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
 


அதாவது, ஸ்டேசனில் 4 பேட்ரோல் வண்டி இருந்தால் 3 வண்டி இன்சார்ஜ் மற்றும் டிரைவர்களுக்கு விடுப்பு அளிக்கலாம். ஒரு பேட்ரோல் வண்டி மட்டும் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். செக்டார் பார்ட்டிகளையும் குறைத்து அவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும். கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் பணியில் இருக்கும் போலீஸ்காரர்களுக்கு விடுப்பில் முன்னுரிமை அளிக்க உத்தரவிட்டுள்ளர். இதன்படி 4 மண்டலங்களிலும் போலீஸார்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் போக்குவரத்து போலீஸாருக்கு விடுமுறை அளிக்கப்பட்டதில் குளறுபடி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இதுகுறித்து போக்குவரத்து காவலர் ஒருவர் நம்மிடம், “ஏற்கனவே 50 வயதைக் கடந்தவர்களுக்கு ஆணையர் உத்தரவின் பேரில் 45 நாட்கள் விடுப்பு அளிக்கப்பட்டது. விடுப்பு முடிந்து தற்போது தான் அவர்கள் பணிக்குத் திரும்பி உள்ளனர். இந்நிலையில், மீண்டும் அவர்களையே விடுப்பில் அனுப்பி உள்ளனர். ஏற்கனவே பணியாற்றிய எங்களுக்கு விடுப்பு மறுக்கப்படுகிறது. இது என்ன நியாயம்? தெற்கு மண்டலத்தில் தி.நகர், அடையாறு, பரங்கிமலை இந்த 3 மாவட்டத்திலும் இதே மாதிரிதான் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. தயவு செய்து இந்த விஷயத்தை எங்கள் கூடுதல் கமிஷ்னர் கவனத்துக்கு காவல்நிலையத்தில் உள்ள அதிகாரிகள் கொண்டு சென்று விடுமுறை எடுக்காதவர்களுக்கு விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வெறுப்பு பிரச்சாரம்; மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போராட்டம் (படங்கள்)

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும்  பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவும், வழக்கு பதிவு செய்திடவும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் மத்திய சென்னை மாவட்டம் சார்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை கண்டனம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. பிறகு நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க, பேரணியாக சென்றனர்.

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.