Skip to main content

பிரதமர், முதல்வர் அவர்களே! நாங்களும் உங்களைப்போல செயல்பட உதவுங்கள்! - சு. வெங்கடேசன் எம்பி கோரிக்கை

Published on 26/03/2020 | Edited on 26/03/2020

 

 

 

     


கரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், "பிரதமரும், முதல்வரும் தொடர்ந்து மக்களுக்கு  சொல்லிகொண்டிருப்பதை விட முழுவீச்சில் செயலில் இறங்குங்கள். நாட்டை ஆளும் பிரதமர் முதல் உள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வரை மக்களைப் பார்த்து கையெடுத்துக் கும்பிடுகின்றனர். மக்களின் உயிர் காக்கவே இச்செயல்பாடுகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

அரசை எந்த வகையிலும் குறைசொல்ல இது நேரமில்லை. எனவே அரசையே முன்னுதாரணமாக கொண்டு மக்கள் பிரதிநிதிகளான நாங்களும் பொறுப்போடு நடந்து கொள்ள முயற்சிக்கிறோம். அதற்கு உதவியாக இரண்டு விசயங்களை மட்டும் எங்களுக்கு தெரிவியுங்கள்:

 

ssss


1. பிரதமர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களே! இந்தியா முழுவதும் வெண்டிலேட்டர் தயாரிக்கின்ற நிறுவனங்களின் ஏற்றுமதியை நான்குநாட்களுக்கு முன்பு வரை அனுமதித்திருக்கிறீர்கள். மேற்குலக நாடுகள் மிக அதிக வெண்டிலேட்டர்களை இந்திய நிறுவனங்களிடமிருந்து வாங்கியிருக்கிறது. இதையெல்லாம் பற்றி இப்பொழுது விளக்கம் எதுவும் சொல்ல வேண்டாம். இந்திய நிறுவனங்களிடம் இப்பொழுது எவ்வளவு வெண்டிலேட்டர்கள் கைவசம் இருக்கிறது? உள்நாட்டு, மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு வெண்டிலேட்டர்களைப் பெற்று இப்பொழுது இந்திய மருத்துவமனை பயன்பாட்டுக்கு நீங்கள் கொண்டுவர திட்டமிட்டிருக்கிறீர்கள்?
 

2 தமிழக முதல்வர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களே! தமிழ்நாடு மருந்து சேவைக் கழகம் (TNMSC ) மூலம் என-95 முகக்கவசம் எவ்வளவு வாங்கி இருக்கிறீர்கள்? இன்றைய தேதியில் உங்கள் கையில் அப்படியொரு பொருள் இருக்கிறதா?
 

இந்த இரண்டு கேள்விகளுக்கு மட்டும் நீங்கள் பதில் சொல்லுங்கள். கரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் போராட்டத்துக்கு அடிப்படையானது வெண்டிலேட்டர். கரோனா தடுப்புக்கு மிக அவசியமானது என்-95 முகக்கவசம். தேசியப்பேரிடராக அறிவிக்கப்பட்டிருக்கிற கரோனா தொற்றினை தடுக்கும் மிக அடிப்படையான இந்த இரண்டு விசயத்தில் மத்திய மாநில அரசுகள் எவ்வளவு விழிப்போடு செயல்பட்டுள்ளன பாருங்கள் என்று மக்களுக்கு எடுத்துச்சொல்ல இந்த விபரங்கள் மிக முக்கியமானது. மக்கள் பிரதிநிதிகளான நாங்களும் உங்களைப்போல விழிப்புணர்வோடு செயல்பட எங்களுக்கு உதவுகள்" என கோரிக்கை வைத்துள்ளார்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை” - வேட்பாளர் சரவணனை ஆதரித்து செல்லூர் ராஜு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sellur Raju supporting candidate Saravanan and critcizing amitshah

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தல் நடைபெற இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில், மதுரை மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். இந்த நிலையில், மதுரையில் வசிக்கும் வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்கு சேகரித்தார். அப்போது, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் அணிவிக்கும் தலைப்பாகையோடு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, வேட்பாளர் சரவணன் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

இதனைத் தொடர்ந்து, செல்லூர் ராஜு, அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது செல்லூர் ராஜுவிடம், “அதிமுகவும், திமுகவும் மாறி மாறி ஊழல் செய்துவிட்டதாக அமித்ஷா கூறியிருக்கிறாரே? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “அமித்ஷா ஏதோ பேச வேண்டும் என்பது போல் பேசுகிறார். திராவிட இயக்கங்கள் 1967-ல் ஆட்சிக்கு வந்தது. அன்றைக்கு மத்தியில் ஆளுகின்ற காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டு மக்களை எலிக்கறி சாப்பிட வேண்டும் என்றும் ஒரு வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மாணவர்கள் படிக்கின்ற விடுதிகளில் கூட மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு கிடையாது. ஏனென்றால் உணவு பற்றாக்குறை.

இந்த மாதிரி நிலைமை எல்லாம் அப்போது இருந்தது. மொழியாலும், கலாச்சாரத்தாலும் தமிழ்நாடு தனித்துவம் பெற்றதன் அடிப்படையில், பேரறிஞர் அண்ணா தான் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார். தமிழ்நாடு என்று பெயர் வைத்ததற்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது. இந்த திராவிட இயக்கங்கள் தான் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்துகிற திட்டங்களைத் தான் பிற மாநிலங்களில் பின்பற்றுகிறார்கள். அம்மா உணவகம் ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது

தமிழ்நாட்டில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. சிறு, குறு தொழில்களில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலமாக இருக்கிறது. இங்கே வருகிற நிதியில் தான் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு நிதி தருகிறார்கள். எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை. ஊழலுக்காக திமுக ஆட்சி தான் கலைக்கப்பட்டது. அவர் உண்மையாக எங்களை பற்றி குறை சொல்லவில்லை. தி.மு.க பற்றி குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார். மதுரையில் அமித்ஷா ரோட் ஷோ நடத்தினார். ஆனால் பாவம் அங்கு டீ குடிப்பவன் கூட அவரைத் திரும்பி பார்க்கவில்லை. அவர் மட்டுமே கை காட்டிக் கொண்டு போனார்” என்று பேசினார்.

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.