Skip to main content

ஊரடங்களால் தவிக்கும் மக்களுக்கு மளிகை பொருள் தரும் எ.வ.வேலு!

Published on 06/04/2020 | Edited on 06/04/2020


கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்கச்சொல்லி பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்களிடையே வலியுறுத்தி வருகின்றனர்.

 

corona virus Impact - DMK EV velu giving Grocery products to people

 



இதனால் ஏழை கூலித் தொழிலாளிகள், பொதுமக்களுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அரசு சார்பில் 15 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை,1 கிலோ பருப்பு,1 லிட்டர் சமையல் எண்ணெய்,ஆயிரம் ரூபாய் பணம் தந்தாலும்,ஊரடங்கால் எகிறிப்போன விலைவாசியால் இந்த 1000 ஆயிரம் ரூபாய் இரண்டு நாளைக்குத் தான் பொதுமக்களுக்கு உபயோகமாக இருந்தது.

இதனால் ஏழை கூலித் தொழிலாளர்கள்,ஒடுக்கப்பட்ட மக்கள்,அமைப்பு சாரா தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.இவர்கள் அனைவரும் தினமும் வேலைக்குச் சென்றால் தான் சாப்பாடு என்கிற நிலையிலேயே உள்ளனர்.இவர்களுக்கு அரசு தந்த பொருட்கள் மற்றும் நிவாரணநிதி போன்றவை போதுமானதாக இல்லை.

http://onelink.to/nknapp


பெரும்பாலான ஏழை மக்கள் பிறரிடம் உதவி எனக் கையேந்தவும், கேட்கவும் தயங்குகின்றனர். கடன் வாங்கவும் முடியவில்லை,இதனால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர்.இது பற்றிய தகவல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலமாகத் திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், திமுகவின் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கவனத்துக்கு வந்தது.கரோனா ஊரடங்கு உத்தரவால் கடந்த 23ந்தேதி முதல் வீட்டுக்குள்ளேயே இருந்தவர்.தகவல் கேள்விப்பட்டதும் உடனடியாகத் தனது சொந்த நிதி மூலமாக அத்தியாவசியப் பொருட்கள் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், சோப்பு, கடுகு, மைதா, ரவை உட்பட மளிகை பொருட்கள் அடங்கிய பையை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்க முடிவு செய்தார்.

திருவண்ணாமலை,தந்தை பெரியார் நகரில் உள்ள தொழிலாளர்கள் 100 பேருக்கு முதல் கட்டமாக அவற்றை வழங்கினார்.தொடர்ந்து மற்றவர்களுக்கு தரும் பணியில் ஈடுப்பட்டுள்ளார். அதேபோல் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் கையுறை,முகவுரை,கிருமிநாசினி பாட்டில்கள் போன்றவற்றை வழங்கினார்.மேலும் ஊரடங்கு உத்தரவு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கு,மாவட்ட திமுக சார்பில் உணவு,குடிநீர் பாட்டில்கள் போன்றவற்றை வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.