Skip to main content

நாகையில் ஒரே இடத்தில் இரண்டாயிரத்து ஐநூறு பேருக்கு கரோனா தடுப்பூசி!

Published on 08/01/2022 | Edited on 08/01/2022

 

Corona vaccine for two thousand five hundred people in one place in Naga!

 

நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியில் ஒரே இடத்தில் 2500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாமை ஆட்சியர் அருண் தம்புராஜும், சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸும் தொடங்கி வைத்தனர்.

 

தமிழத்தில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்கிறது. நேற்று மட்டுமே எட்டாயிரத்தை தாண்டியிருக்கிறது. அதிகபட்சமாக திருச்சியில் மட்டுமே 184 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கரோனா வீரியத்தின் தீவிரத்தை உணர்ந்து நேற்று முன்தினம் முதல் இரவு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அன்று முழுநாளும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேசமயம், அரசின் உத்தரவை தொடர்ந்து 15 வயது முதல் 18 வயதுள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் இன்று தொடங்கப்பட்டது. நாகை இ.ஜி.எஸ்.பிள்ளை கல்லூரியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகாமில் 2500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று கோவேக்சின் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். முகாமில் தடுப்பூசி செலுத்தியவர்களை ஊக்குவிக்கும் வகையில் டிபன் பாக்ஸ் பரிசாக வழங்கி கரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது. 

 

நிகழ்வுக்கு முன்னதாக நாகை நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த ஆட்சியர், "நாகை மாவட்டத்தில் உள்ள 15 முதல் 18 வயதுடைய 25,089  பேருக்கு கரோனா தடுப்பூசி இன்று முதல் செலுத்தப்படுகிறது. அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பேரறிவாளன் விடுதலை; ஒன்றிய அரசுக்கு மிகப்பெரிய சாட்டையடி” - எம்.எல்.ஏ  ஆளூர் ஷாநவாஸ் 

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

Aloor Shanavas comment on Perarivalan release
கோப்புப் படம் 

 

“பேரறிவாளன் விடுதலையில் ஒன்றிய அரசுக்கு ஒரு மிகப்பெரிய சாட்டையடி கிடைத்திருக்கிறது” என்கிறார் விசிக மாநில துணைப் பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான ஆளூர் ஷாநவாஸ்.

 

முப்பது வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் ஆளூர் ஷாநவாஸ், “30 ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு குறிப்பாக அற்புதம் அம்மாள் என்கிற ஒற்றை தாயின் போராட்டத்திற்கு கிடைத்திருக்கின்ற ஒரு மகத்தான வெற்றியாக இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தால் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். 

 

இன்னும் இதுபோன்று விடுதலை செய்யப்பட வேண்டியவர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை இந்த தீர்ப்பின் மூலம் நமக்கு கிடைத்திருக்கிறது. இது பேரறிவாளன் வழக்கு பேரறிவாளன் என்கிற ஒற்றை மனிதரின் விடுதலை என்று சுருக்கி பார்த்து விட முடியாத அளவிற்கு இதில் மாநில அரசினுடைய அதிகாரம் இன்றைக்கு உச்ச நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. 

 

குறிப்பாக அரசியல் அமைப்பு சட்டம் 161வது பிரிவின் கீழ் மாநில அரசுக்கு முடிவெடுக்கக் கூடிய அதிகாரத்தை வழங்கி இருக்கிறது. அந்த பிரிவின் கீழ் மாநில அரசு ஒரு தீர்மானத்தை ஏற்றினாலோ, ஒரு சட்டமன்றம் கூடி முடிவு எடுத்தாலும் அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதுதான் அதில் இருக்கிற ஒன்று. ஆனால், அதை அவமரியாதை செய்யக்கூடிய வகையில் சட்டமன்றத்தையே அவமரியாதை செய்யக்கூடிய வகையில் தமிழ்நாடு ஆளுநர் தொடர்ந்து இந்த விஷயத்தில் முடிவெடுக்காமல் தன்னுடைய கருத்தின் அடிப்படையில் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டிருந்தார். அதற்கு இன்றைக்கு உச்சநீதிமன்றம் பதிலடி கொடுத்திருக்கிறது.

 

மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை; ஒன்றிய அரசுக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. குடியரசுத் தலைவர்தான் முடிவெடுப்பார் என்றெல்லாம் இதில் பந்தாடி கொண்டிருந்த, விளையாடிக்கொண்டிருந்த ஒன்றிய அரசுக்கு ஒரு மிகப்பெரிய சாட்டையடி கிடைத்திருக்கிறது.

 

மாநில அரசின் அதிகாரமும் உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது‌. ஒன்றிய அரசுக்கும் ஆளுநருக்கும் சரியான பதிலடி கிடைத்திருக்கிறது. பேரறிவாளனும் 30 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். ஆகவே இது ஒரு முப்பரிமான மகிழ்ச்சியை நமக்கு தருகிறது. இதில் மிக முக்கியமாக நாம் சொல்ல வேண்டியது இவ்வளவு நாளும் நாம் சொல்லிக் கொண்டிருந்த அதே கருத்துதான், ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; மாநில அரசினுடைய முடிவை ஏற்று செயல்பட வேண்டிய இடத்தில் இருப்பவர் ஆளுநர்.


முதலமைச்சரின் மொழியில் சொல்வதென்றால் ‘ஒரு போஸ்ட்மேன்.’  அது இந்த இந்திய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் அவர் போஸ்ட் மேன் தான். நம்முடைய சட்டமன்றம் தான் உயர்வானது, மதிப்பானது, அதிகாரம் மிக்கது என்பது மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது" என்றார்.

 

 

Next Story

'டீ செலவு மிச்சமா? டீசல் செலவு மிச்சமா?'- சூடு குறையாத தேநீர் விருந்து புறக்கணிப்பு விவகாரம்!

Published on 15/04/2022 | Edited on 19/04/2022

 

Is the cost of tea left over? Is diesel left over? '- Neglected tea party!

 

நீட் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் அனுமதியளிக்காததால் சட்டமன்றத்தின் மாண்பையும் தமிழக மக்களையும் மதிக்கவில்லை என்று கூறி தமிழக அரசு ஆளுநர் கொடுத்திருந்த தேநீர் விருந்தை புறக்கணித்திருந்தது. நேற்று ஆளுநரை சந்தித்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, ''முதல்வரின் பல்வேறு வலியுறுத்தல்களுக்குப் பிறகும் ஆளுநர் தற்போது வரை நீட் விலக்கு உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு பதிலளிக்கவில்லை. தற்போது வரை ஆளுநர் இது குறித்து எந்தவித உத்தரவாதத்தையும் எங்களுக்கு வழங்கவில்லை. எனவே ஆளுநர் கொடுக்க இருக்கும் தேநீர் விருந்து நிகழ்விலும், பாரதியார் சிலை நிகழ்விலும் தமிழக அரசு பங்கேற்காது'' என விளக்கியிருந்தார்.

 

Is the cost of tea left over? Is diesel left over? '- Neglected tea party!

 

நேற்று மாலை நடைபெற்ற தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை ''தமிழக அரசு ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்ததால் ஆளுநருக்கு டீ செலவு மிச்சம். இதனால் மக்கள் வரிப்பணம் கொஞ்சம் சேவ் ஆகிறது என்றார்.

 

Is the cost of tea left over? Is diesel left over? '- Neglected tea party!

 

அண்ணாமலையின் இந்தக் கருத்துக்கு டிவிட்டர் வாயிலாக பதிலளித்துள்ள விசிக எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் 'டீ செலவு மிச்சமா? டீசல் செலவு மிச்சம் என பதிவிட்டுள்ளார். அதேபோல் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவருடைய டிவிட்டர் பக்கத்தில், 'இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட மறந்து விடாதீர்கள் ஆளூர் ஷா நவாஸ் சகோதரரே. இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னதுபோல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம்' தெரிவித்துள்ளார்.