Skip to main content

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்காக 7,737 படுக்கைகள்! கலெக்டர் தகவல்

Published on 23/07/2020 | Edited on 23/07/2020
pudukkottai district  - Collector

 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சைக்காக கூடுதல் படுக்கைகள் தயாராக உள்ளதாக ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கூறியுள்ளார்.

 

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மருத்துவம், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கூறும் போது, 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ராணியார் மருத்துவமனை மற்றும் முத்துலெட்சுமி ரெட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிகிச்சைக்காக கூடுதல் படுக்கைகளுடன் கூடிய மையங்கள் ஏற்படுத்துவது குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கட்டுப்பாட்டில் இயங்கும் ராணியார் மருத்துவமனையில் 1000 படுக்கைகளும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மருத்துவமனையில் 200, அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனையில் 100, 12 அரசு தாலுகா மருத்துவமனைகளில்  123, 13 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 195 படுக்கைகளும், தனியார் மருத்துவமனைகளில் 121 படுக்கைகளும் என 1739 படுக்கைகள் கரோனா சிகிச்சைக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

மேலும் தற்போதைய நிலவரப்படி ராணியார் மருத்துவமனை மற்றும் டாக்டர் முத்துலெட்சுமி மருத்துவமனைகளில் 608 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் மற்ற 1,131 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும் குடுமியான்மலை வேளாண் பல்கலைக்கழகத்தில் 150 படுக்கைகளும், புதுக்கோட்டை குடிசை மாற்று வாரியத்தில் 1000 படுக்கைகளும், புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 100 படுக்கைகளும் என 1250 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

 

எதிர்வரும் நாட்களை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள 212 சமுதாயக் கூடங்களில் 1319 படுக்கைகளும், 27 மாணவர்கள் விடுதிகளில் 434 படுக்கைகளும், 121 திருமண மண்டபங்களில் 2,995 படுக்கைகளும் என 4,748 படுக்கைகளும் அமைத்து சிகிச்சை அளித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.