Skip to main content

கரோனா பரவலை தடுக்க கிரிவலத்திற்கு தடை!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020
thiruvannamalai


கரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இருந்து வரும் இந்த தடை உத்தரவில் இருந்து ஜூன் 1ந் தேதி முதல் பல விலக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. இருந்தும் எங்கும் கூட்டம் கூடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலை வலம் என்கிற கிரிவலம், தென்னிந்தியாவில் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் 5 லட்சத்துக்கும் குறையாமல் பக்தர்கள் வருவார்கள். கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கிரிவலம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. யாரும் கிரிவலம் வரமுடியாதபடி பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில் ஜீன் 5ந் தேதி பௌர்மணி. இன்று கிரிவலம் வர அண்ணாமலையார் பக்தர்கள் முடிவு செய்துயிருந்தனர். அதற்கு தடை என ஜூன் 3ந்தேதி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 444 கரோனா நோயாளிகள் உள்ளனர். இதில் 320 பேருக்கான மருத்துவ சிகிச்சை நடைபெற்றுவருகிறது. 300 கரோனா நோயாளிகள் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வந்தவர்கள், இவர்களால் கரோனா மாவட்டமாகி சிவப்பு மண்டலத்தில் உள்ளது. இதனால் ஜூன் 1ந்தேதி மற்ற மாவட்டங்களுக்கு தரப்பட்ட பல சலுகைகள் இங்கு இல்லாமல் உள்ளது.

 

 


இந்நிலையில் கிரிவலத்துக்கு அனுமதி வழங்கி மக்கள் வரத்துவங்கினால் இன்னும் நோய் பரவும் என்பதால் கிரிவலத்துக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பௌர்மணியன்று பக்தர்கள் யாரும் கிரிவலம் வரமுடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுவருகிறார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபி.சக்கரவர்த்தி.   
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.