Skip to main content

முதல்வர் வருகையால் குறைந்துபோனதா கரோனா பரிசோதனை?

Published on 29/08/2020 | Edited on 29/08/2020

 

edappadi palanisamy

 

திருவண்ணாமலைக்கு, கரோனா தொடர்பான அரசு அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வரும் செப்டம்பர் 4 -ஆம் தேதி முதல்வர் பழனிசாமி வர இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் பெருந்திட்ட வளாகம் முழுவதும் வண்ணம் பூசப்பட்டு, கூட்ட அரங்கு சீர் செய்யப்படுகிறது.

 

இந்நிலையில் முதல்வர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வரும்போது, கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக கரோனா பரசோதனை மாவட்டம் முழுவதும் குறைக்கப்பட்டுள்ளது என்கிற சர்ச்சை எழுந்துள்ளது. அதற்குக் காரணம் மாவட்ட நிர்வாகம் தினமும் வெளியிடும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தே வருவதுதான்.

 

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை மாவட்டத்தில்தான் அதிகளவு கரோனா நோயாளிகள் இருந்தனர். தினமும் 100 நபர்களுக்கு குறையாமல் கரோனாவால், மருத்துவமனை மற்றும் சிறப்பு சிகிச்சை முகாம்களில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் வெளியிடும் தினசரி பட்டியலில், கடந்த சில தினங்களாக கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தே காணப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி 61 நபர்களும், 22ஆம் தேதி 87 நபர்களும், 23ஆம் தேதி 100, 24ஆம் தேதி 145, 25ஆம் தேதி 102, 26ஆம் தேதி 58, 27ஆம் தேதி 99, 28ஆம் தேதி 205 நபர்கள் எனக் குறிப்பிட்டுள்ளனர். இப்படி வேகமாகக் குறைய வாய்ப்பேயில்லை என்பதே பலரின் குற்றச்சாட்டு.

 

இது உண்மையா என மருத்துவ அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, பரிசோதனை செய்கிறோம், அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும்மில்லை என நழுவுகிறார்கள்.

 

இதுக்குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தரப்பில் கேட்டபோது, ஆரம்பம் முதலே பரிசோதனை எண்ணிக்கை அதிகமாக வைத்திருந்தது திருவண்ணாமலை மாவட்டம். அதேபோல் பிறமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு பெரும்பான்மையானவரை தனி முகாமில் வைத்துப் பரிசோதனை முடிவுக்கு பின்பே அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். இதனால் தொடக்கத்தில் அதிகளவு நோயாளிகள் வந்தனர். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை மற்ற மாவட்டங்களில் செய்யவில்லை. நாம் முன்னெச்சரிக்கையாக எல்லா வசதிகளையும் செய்திருந்தோம், அனுமதித்தோம், உடனடியாக சிகிச்சை அளித்து அவர்களைக் குணமாக்கி அனுப்பினோம். இதனால் தற்போது நமது மாவட்டத்தில் எண்ணிக்கை குறைந்துவருகிறது. மற்ற மாவட்டங்கள் ஆரம்பத்தில் போதிய அக்கறை செலுத்தவில்லை. தற்போதுதான் மற்ற மாவட்டங்கள் அதிகளவில் பரிசோதனை நடத்துகின்றனர். பரிசோதனை அதிகரிக்கும்போது அதிகளவு நோயாளிகள் தினமும் கண்டறியப்படுகிறார்கள். அதனால் நம் மாவட்டத்தை விட அதிகமாக தெரிகிறது. இதுதான் காரணமே தவிர, பரிசோதனை எண்ணிக்கையைக் குறைக்கவில்லை.

 

AD

 

கடந்த மாதம் 25 -ஆம் தேதி எவ்வளவு பரிசோதனை செய்யப்பட்டதோ, அதே அளவில் தான் இன்றும் பரிசோதனை செய்யப்படுகிறது. சில தினங்கள் குறைந்த அளவு பாசிட்டிவ் கேஸ்கள் வருகிறது, பல நாட்கள் அதிகளவு வருகிறது. நீங்கள் நன்றாக தினசரி டேட்டாவை பாருங்கள், உண்மை தெரியும் என்றார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.