Skip to main content

கரோனா வைரஸ் தாக்குதலுக்கு நன்றி, இந்து மக்கள் கட்சி போஸ்டரால் பரபரப்பு!!!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

corona poster issue

 

கரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்து மக்கள் கட்சியினர் நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டியிருக்கும் விவகாரம் விவாதத்தையும், பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.


கரோனா நோயால் ஒட்டுமொத்த உலகமும் பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு வகையில் உருகுலைந்து கிடக்கிறது. இந்திய அரசு கரோனா தொற்று ஏற்பட்ட காலம் முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து நோய்தொற்றில் இருந்து மீளும்வகையில் பல்வேறு செயல்களை செயல்களை செய்துவருகிறது. அதை தமிழக அரசும் வழிமொழிந்து செயல்படுத்தி வருகிறது. அதற்காக பல்வேறு தரப்பினரும் பாராட்டி சுவரொட்டி ஒட்டி வருகின்றனர். ஆனால் இந்து மக்கள் கட்சியினர் சற்று வித்தியாசமாக கரோனா வைரஸ்க்கு நன்றி தெரிவித்து போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி கூறுகையில், "கரோனா நோய்தொற்று ஏற்பட்ட நாள்முதல் இந்த நோயை கட்டுப்படுத்த மாத்திரை, மருந்துகள் இல்லாமல் எதிர்ப்பு சக்தி மட்டுமே பிரதானமாக கருதப்பட்டது. அதற்காக முதாதையர்கள் பின்பற்றி வந்த தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் மீண்டும் நடைமுறைக்கு வந்தது . 

குறிப்பாக கை கொடுப்பது, கட்டி அணைப்பது புறந்தள்ளப்பட்டு, வணக்கம் வைப்பது சரியான நடவடிக்கை என அரசு சார்பில் விளம்பரங்களில் ஒளிபரப்பப்பட்டது.

 

 


அதேபோல் மஞ்சள் தேய்த்து குளித்தல், பல்வேறு கிராம மற்றும் நகர பகுதிகளில் கிருமிநாசினி மருந்தாக வேப்பிலை மஞ்சள் உப்பு கலந்த தண்ணீரை பல்வேறு இளைஞர்கள் கிராமம் முழுவதும் தெளித்தது. அனைவரும்  வேப்பிலையை வீட்டு முன்பாக வைத்தது. பல்வேறு நகரப்பகுதிகளில் வேப்பிலை விற்பனைக்கு வந்தது. வேப்பிலை உள்ளிட்ட மூலிகை பொருட்களின் மருத்துவ குணத்தை மக்களுக்கு உணர்த்தியது. ஆரம்ப காலங்களில் நம் முன்னோர்கள் நமக்கு சொன்ன கருத்தான வெளியில் சென்று வந்தால் கை மற்றும் கால்களை சுத்தமாக கழுவ வேண்டும் என்ற நடைமுறை மீண்டும் வந்தது. 

விவசாயம் சார்ந்த தொழில்கள் மட்டுமே நமக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தி ஆடம்பர வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் அடுத்தவருக்கு உதவிட வேண்டுமென்கிற மனப்பான்மை ஏற்படுத்தியது. குறிப்பாக கபசுரக் குடிநீர் என்கிற எதிர்ப்பு சக்தி உள்ள சித்த மருத்துவத்தை அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

நம் பண்டைய கால விளையாட்டுகள் நம் வாழ்வில் ஏற்படும் அர்த்தத்தை குறிக்கின்ற வகையில் இருந்து வந்தது குறிப்பாக தாயம், பல்லாங்குழி, கயிறு தாண்டுதல், பரமபதம், பட்டம் விடுதல் போன்ற நம் வாழ்வியலை உணர்த்தும் வகையில் உள்ள விளையாட்டுகள் மீண்டும் நமது இல்லத்திற்கு வந்தடைந்தது. இந்த கரோனா நோயுற்ற காலத்தில் உலகம் முழுவதும் நமது தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் நடைமுறைப்படுத்தியது. பல்வேறு விஷயங்கள் இந்த கரோனா தொற்று காலகட்டத்தில் பல்வேறு இக்கட்டான சூழ்நிலை காலகட்டத்தில் அனுபவித்திருந்தாலும் வருங்காலத்தில் நாம் சுத்தமாக இருப்பதும், மேலைநாட்டு கலாச்சாரத்தை புறந்தள்ளி விட்டு நமது தமிழர் கலாச்சாரத்தை கடைப்பிடித்தாலே நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்." என்றவர், இறுதியாக, இது வெறும்  சுவரொட்டி தானே தவிர வேற எந்த உள்நோக்கமும் இல்லை," என முடித்துக்கொண்டார்.
 

nakkheeran app



இந்த போஸ்டர் விவகாரம் கும்பகோணம் பகுதியில் பேசும் பொருளாக மாறியுள்ளது, நாடே அல்லோல பட்டுக்கிடக்கும் சூழலில் இதுபோன்ற கேலி கிண்டல் தேவையா என பலரும் பேசுகின்றனர். 

கும்பகோணம் ஆன்மீக பிரமுகரும், சமுக ஆர்வளருமான சுவாமிஜி ஒருவரிடம் இது குறித்து கேட்டோம்," அவர்கள் கூறியதில் தவறில்லை, ஆனால் சொன்ன சமயம் தவறு. இன்று கரோனா எனும் கொடிய வைரஸால் ஒட்டுமொத்த நாடுகளும் அடுத்தடுத்து என்ன ஆகுமோ, பொருளாதார சிக்கலை எப்படி சமாளிப்பது என்கிற கவலையில் மூழ்கியுள்ளனர், நடுதர மக்கள் வேலையின்றி, வருமானத்தை இழந்து இனிவரும் காலத்தில் எப்படி குடும்பத்தை நடத்துவது என்கிற மனவேதனையில் உறைந்து கிடக்கின்றனர். அடிதட்டு மக்களான அன்றாடம் காய்ச்சிகள், தினக்கூலிகளின் குடும்பங்களில் வேலையின்றி பட்டினிச்சாவுகள் துவங்கிவிட்டன. இப்படிபட்ட சூழலில் இப்படியோரு போஸ்டர் அடிக்க முடிவு செய்து அதற்கு செலவு செய்திருப்பதற்கு பதிலாக அந்த பணத்தில் நாலு குடும்பத்திற்கு உதவியிருக்கலாம்." என்கிறார் தனக்கே உரிய பாணியில்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதற்கு பா.ஜ.க வெட்கப்பட வேண்டும்” - ஜெயக்குமார் ஆவேசம்

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Jeyakumar raves on BJP should be ashamed of this

இரண்டு நாள் சுற்றுப் பயணமாக கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வந்திருந்த பிரதமர் மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனையடுத்து இரண்டாவது நாளாக தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். 

அந்த வகையில் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் எனக் கூறி பேசுகையில், “கடந்த 1991இல் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு இடையில் காஷ்மீரில் தேசியக்கொடியை ஏற்றினோம். நல்லாட்சியை நடத்தி தமிழகத்திற்கு கல்வி, சுகாதாரத்தை எம்.ஜி.ஆர். கொடுத்துள்ளார். குடும்ப அரசியல் நடத்தி எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வரவில்லை. எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதாதான் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தார். ஜெயலலிதா தனது வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பணியாற்றினார். என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது” என்று பேசினார். 

இதற்கிடையே, பா.ஜ.க லாஸ்பேட்டை தொகுதி நிர்வாகிகள் தாமரை சின்னத்துக்கு வாக்கு கேட்டு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா படங்களுடன் பல்வேறு இடங்களில் போஸ்டர் ஒட்டியிருந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகி அ.திமு.கவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “பா.ஜ.கவினரின் செயலுக்கு புதுச்சேரி அ.தி.மு.க பிரிவு சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளோம். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை பா.ஜ.க பயன்படுத்த வெட்கப்பட வேண்டும். எதற்காக இப்படி எங்கள் தலைவர்கள் படங்களை பயன்படுத்துகிறீர்கள்?. அதிமுக தலைவர்களை முன்னிலைப்படுத்தி, பா.ஜ.க வாக்கு பெற நினைப்பது கீழ்த்தரமானது. தங்கள் தலைவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்று இதன்மூலம் தெரிகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா முகங்களைக் காட்டி மக்களை ஏமாற்ற முயன்றால் அது நடக்காது. அந்த இரண்டு முகங்களும் அதிமுகவுக்கு மட்டுமே சொந்தமானது” என்று கூறினார். 

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.