Skip to main content

குமாி மாவட்ட வருவாய் அதிகாாிக்கு கரோனா... கலெக்டா் அலுவலக ஊழியா்கள் அதிா்ச்சி!

Published on 22/10/2020 | Edited on 22/10/2020
Corona to Kumari District Revenue Officer ... Collectorate staff surprised!

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு கட்டுபடுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளா் ராதாகிருஷ்ணன் கூறியுள்ள நிலையில் குமாி மாவட்டத்தில் தினமும் குறைந்தது 30 போ் கரோனாவால் பாதிக்கபட்டுள்ளனா் என்று மாவட்ட நிா்வாகமும் தொிவித்து வருகிறது.

இந்தநிலையில் குமாி மாவட்ட வருவாய்துறை அதிகாாியாக இருக்கும் ரேவதி அனைத்து தரப்பு மக்களிடமும் நெருக்கமாக பழக கூடியவா். கரோனா காலத்திலும் மக்கள் அல்லல்படும் அடிப்படை வசதிகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்கும் சக ஊழியா்களுடன் மக்களோடு மக்களாக நெருக்கம் காட்டியவா். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக டி.ஆர்.ஒ ரேவதிக்கு உடல்நிலை பாதிக்க பட்டியிருந்ததால் மருத்துவ பாிசோதனையில் அவருக்கு இன்று (22-ம் தேதி) கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து டி.ஆா்.ஒ ரேவதி ஆசாாிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூாி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதனால் கலெக்டா் அலுவலக ஊழியா்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா். ஏனென்றால் கலெக்டா் அலுவலகத்தில் தொடா்ந்து நடந்த மீட்டிங்கில் டி.ஆா்.ஓ ரேவதி கலந்து கொண்டுள்ளாா். அதேபோல் அனைத்துதுறை அதிகாாிகளுடன் தனியாகவும் ஆலோசனைகள் நடத்தியுள்ளாா்.

தமிழக அரசு பதிவு மற்றும் பத்திரதுறை தலைவரும் குமாி மாவட்ட கண்காணிப்பாளருமான ஜோதி நிா்மலா சில தினங்களுக்கு முன் கலெக்டா் அலுவலகத்தில் பருவ மழை தொடங்க இருப்பது சம்மந்தமான ஆய்வு கூட்டத்தில் அனைத்து துறை அதிகாாிகளும் கலந்து கொண்டாா். அப்போது அந்த கூட்டத்திலும் டி.ஆா்.ஒ கலந்து கொண்டதால் அனைவரும் அதிா்ச்சியில் உள்ளனா்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.