Published on 26/07/2020 | Edited on 27/07/2020
![corona](http://image.nakkheeran.in/cdn/farfuture/l8arEJn6Uscot-Yk-fUC4WTCogc7IUgsOSHUP7x-1IM/1595781705/sites/default/files/inline-images/cvgdgdg.jpg)
தமிழகத்தில் மக்கள் களப்பணியாளர்களான காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், மருத்துவர்கள், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கன்னியாகுமரி, கிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ. ராஜ்குமார் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் இதுவரை 18 எம்.எல்.ஏ.க்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.