Skip to main content

தென் மண்டலத்தில் தொடரும் கரோனா தொற்று... 2 ஆவது அலை பரவாமலிருக்க மாஸ்க் அவசியம்... எச்சரிக்கும் சுகாதாரத்துறை!

Published on 26/11/2020 | Edited on 26/11/2020

 

Corona infection to continue in the southern region ... Mask is needed to prevent the spread of the 2nd wave ... Health department warns!

 

கடந்த மார்ச் பாதியில் தேசத்தில் புகுந்த கரோனா எனும் மாயாவி வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடியதோடு இறப்பு எண்ணிக்கையும் 2 சதம் வரை உயர்ந்தது.

 

தமிழகத்தில் பரவிய கரோனாத் தொற்று தென்மாவட்டங்களில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் அதிகரித்தது. இதனைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடாகக் கடுமையான லாக்டவுண் அறிவிக்கப்பட்டும், மக்கள் முகக் கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு அபராதம் விதிப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. லாக்டவுண் காலத்தில் மக்கள் பல்வேறு விதமான இன்னல்களை அனுபவித்தது மறந்திருக்க வாய்ப்பில்லை. இதுபோன்ற கட்டுப்பாடுகளால் தென்மாவட்டத்தில் அன்றாடம் சராசரி 180 வரை சென்ற கரோனா பாதிப்பு நாளடைவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் குறையத் தொடங்கியது.

 

ஆனாலும் 34 சதவிகிதம் மக்கள் மாஸ்க் அணியாமலும் சமூக இடைவெளியைப் பின்பற்றாமலிருப்பதைக் கண்ட சுகாதாரத்துறை, அவ்வப்போது பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று பாதுகாப்பை வலியுறுத்தியது.

 

Corona infection to continue in the southern region ... Mask is needed to prevent the spread of the 2nd wave ... Health department warns!

 

அண்மையில் கரோனாத் தொற்று மிகவும் குறைந்து வரும் நிலையில், தென்காசி மாவட்டத்தில் 6,5,7 என்று அன்றாடத் தொற்று இருந்த நேரத்தில், தற்போது சற்று உயரத் தொடங்கியிருக்கிறது. ஏனெனில், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் வருவதால் மக்கள் மாஸ்க், அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியதைக் கூட மக்கள் பின் பற்றியதாகத் தெரியவில்லை. ஏனெனில் கேரளாவில் ஓணம் பண்டிகைக்குப் பின்பு கரோனா 2 ஆம் அலை உருவெடுத்ததை அறிந்த சுகாதாரத் துறை, வரும் தீபாவளிப் பண்டிகையின் போது மக்கள் கவனமாகச் செயல்பட வேண்டும். மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவேண்டும். ஜாக்கிரதையாக இருங்கள். இல்லையென்றால் இரண்டாம் கட்ட அலை உருவாகிவிடும் மறுபடியும் லாக்டவுண் முடக்கம் என்று எச்சரித்தனர்.

 

இது குறித்து தென்காசி மாவட்டத்தின் சுகாதாரத்துறை இணை இயக்குனரான சிவலிங்கம் கூறுவதோ, "கரோனாவைக் கட்டுப்படுத்த ரெம்டெசிவர், ஆண்டிபயாடிக் சிகிச்சையும் மேற்கொள்கிறோம். மாஸ்க் அணியாமல் சென்றவர்களை எச்சரித்தும் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் பலர் அதைப் பின்பற்றவில்லை. இரண்டாம் அலை உருவாகிவிடக் கூடாது. ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று எச்சரிக்கையையும் வெளிப்படுத்தியவர் தீபாவளிப் பண்டிகை முடிந்து ஒருவாரம் கழிந்துவிட்டது. இன்னும் இரண்டு வாரங்கள் மாஸ்க் அணிந்து கவனமாக இருந்தால் தடுக்கமுடியும். அதன் பிறகு தான் பரவல் நிலைமைகள் பற்றித் தெரியவரும் என்றார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

காவலர்கள் தாக்குதலால் டிரைவர் மரணம்? மக்களின் போராட்டத்தால் தென்காசியில் பதற்றம்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi
வேன் டிரைவர் முருகன்

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகேயுள்ள வடக்குபுதூரைச் சேர்ந்த வேன்டிரைவர் முருகன் கடந்த மார்ச் 8 அன்று (மஹாசிவராத்திரி) அச்சம்பட்டியிலிருந்து பொது மக்களை வேனில் ஏற்றிக் கொண்டு பஞ்சஸ்தலங்கள் செல்வதற்காக சங்கரன்கோவில் டவுண் பஜார் வழியாக வந்திருக்கிறார். அதுசமயம் எதிர்பாராத விதமாக வேன் முன்னே சென்ற ஆட்டோ ஒன்றில் மோதியதால், வேன்டிரைவர் முருகனும் ஆட்டோ ஓட்டுனரும் தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் மெயின் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நகர முடியாமல் நீண்ட தொலைவிற்கு ப்ளாக் ஆகியது போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் சம்பவ இடம் வந்தவர்கள் முருகனை தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் மயக்கமடைந்த முருகனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதையறிந்த முருகனின் உறவினர்கள் சங்கரன்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இரவு முழுக்க சாலை மறியலில் ஈடுபட்டனர்.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

போலீசார் தாக்கியதால்தான் முருகன் இறந்ததாகக் கூறி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்திவருகின்றனர். சம்பவத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அது வரை உடலை வாங்கப் போவதில்லை என்று கூறி அவரது உறவினர்கள் வடக்குபுதூர் கிராமத்தில் 6வது நாளாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உடன் மார்க்சிஸ்ட் கட்சியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அறிவிக்கப்பட்டதன்படி மார்ச் 13 அன்று சங்கரன்கோவில் நகரின் தேரடித் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்துகிற வகையில் காலை 10.30 மணியளவில் நகரைச் சுற்றியுள்ள வடக்குபுதூர், காந்திநகர், அச்சம்பட்டி, புளியம்பட்டி நெடுங்குளம், அழகாபுரி, சீவலராயநேந்தல், அழகுநாச்சியார்புரம், அழகநேரி என 32 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பங்கேற்றனர். அதுசமயம் ஒரு பகுதியினர் நகரின் முக்கியத் தடுப்புகள், தடைகளைப் போட்டு வாகனங்களைத் தடுத்தும் மறியலில் ஈடுபட்டனர். பதற்றம் காரணமாக பாதுகாப்பு பணிக்கென்று போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் நகரம் இறுக்கமானது. இதனிடையே சங்கரன்கோவில் அருகேயுள்ள மருதப்பபுரம் கிராமத்தில் எதிர்பாராத வகையில் வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்ததால் அதனை அணைக்கிற வகையில் அந்த வழியாக வந்த சங்கரன்கோவிலின் தீயணைப்பு நிலைய வாகனத்தை நகருக்குள் விடாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுக்க தீயணைப்பு வாகனம் வேறு வழியாகச் சென்றது.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

நேரம் செல்லச் செல்ல வேறு சில பகுதிகளிலிருந்தெல்லாம் மக்கள் பிரதானச் சாலையை நோக்கி திரண்டு வர அது சமயம் அந்தப் பகுதியிலிருந்த கடைகளை அடைக்கச் சொல்லி கற்களை வீசவே, பதற்றமடைந்த வியாபாரிகள் பீதியில் கடைகளை அடைத்தனர்.  ஆபத்தான நிலையை அறிந்த தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சுரேஷ்குமார் மறியல் நடந்த பழைய பேருந்து நிலைய பகுதிக்கு வந்தவர் அவர்களை சமாதானப் படுத்தியிருக்கிறார். ஆனாலும் ஒரு பகுதியினர் அவரைச் சூழ்ந்து கொண்டவர்கள் அரைமணி நேரத்திற்கும் மேலாக அங்கிருந்து செல்ல விடாமல் முற்றுகையிட்டனர்.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

தொடர்ந்து அவர்களிடம் பேசிய எஸ்.பி, முருகன் இறந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதாக கூறியவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மறியல், ஆர்ப்பாட்டம் என நகரம் துண்டிக்கப்பட, சுற்றுப்பட்டுக் கிராமங்களிலோ, பதற்றமும் பரபரப்பும் இறங்கியபாடில்லை.

Next Story

தண்டவாளத்தில் கவிழ்ந்த லாரி; அதிகாலையில் நிகழ்ந்த விபத்து

Published on 25/02/2024 | Edited on 25/02/2024
Overturned truck on tracks; An early morning accident

கேரளாவில் இருந்து பிளைவுட் ஏற்றி வந்த லாரி தமிழக எல்லையான கோட்டைவாசல்  பகுதியில் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் கேரளாவில் இருந்து பிளைவுட் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புளியரை சோதனை சாவடியை தாண்டி தென்காசி மாவட்டத்தின் கோட்டைவாசல் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்பொழுது மலை பாதையில் சென்று கொண்டிருந்த லாரியானது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.

லாரி செங்கோட்டையிலிருந்து கொல்லம் செல்லும் ரயில்வே தண்டவாளத்தின் மேல் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியை ஓட்டி வந்த முக்கூடல் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நிகழ்ந்த சிறிது நேரத்தில் கேரளாவின் ஆற்றுக்கரை பகவதி அம்மன் கோவில் நிகழ்ச்சிக்காக பயணிகள் இல்லாத சிறப்பு ரயில் ஒன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்தது. விபத்தை அறிந்தவர்கள் இரவு நேரத்தில் டார்ச் லைட் காட்டி ரயிலை நிறுத்தியுள்ளார்கள்.

அந்தப் பகுதியில் அதிகாலையில் அதிகமான ரயில் போக்குவரத்துகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் ரயிலானது செங்கோட்டையிலிருந்து 4 மணிக்கு புறப்படும். அந்த ரயில் இந்த விபத்து காரணமாக அங்கேயே நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்பொழுது ரயில் போக்குவரத்து அந்த பகுதியில் சீரானது. இருப்பினும் மூன்று மணி நேரம் தாமதமாக எழும்பூர்-கொல்லம் ரயில் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.